அய்யா அப்துல் கலாமுக்கு... அய்யா அப்துல் கலாமே! தன்...
அய்யா அப்துல் கலாமுக்கு...
அய்யா அப்துல் கலாமே!
தன் அன்பினால் அகிலத்தையே அடிபணிய வைத்தவரே
தன் தாய் திருநாட்டை தன்னுயிர் போல் கட்டிக் காத்தவரே
தன்நலம் விரும்பா எங்கள் "தமிழ்மகனே"
இத்திருநாட்டின் தலை சிறந்த தலைமகனே
குட்டிக் கதைகள் பல கதைத்து
குழந்தைகளை கவர்ந்தவரே
அந்நிய தேசத்திடமும்
அகிம்சையை மட்டுமே விரும்பிய - எங்கள்
அணு ஆயுதமே !
அண்டத்தையே ஆட்டிப் படைத்த -எங்கள்
அணு குண்டுவே !
உலகமே உற்றுப் பார்த்த - எங்கள்
உலக நாயகனே !
அண்டமே ஆடிப் போனதய்யா - உன்
அணுகுண்டு சோதனையில் !
ஆதிக்கம் செய்தவனெல்லாம்
ஆடிப் போனானய்யா - எங்கள்
அய்யா அப்துல் கலாமிடம் !
அந்நிய நாட்டின் பீரங்கியெல்லம்
பின்னோக்கி நகர்ந்ததய்யா - உன்
பீரங்கி பார்வையிலே !
சனநாயகத்தை சரியாக நடத்தி
சரித்திரம் படைத்த - எங்கள்
சனாதிபதியே !
தன் வல்லமைப் பேச்சால் வாலிபர்களையெல்லம்
தன் வசப்படுத்திய வல்லமை மிக்க வாலிபரே !
அடிமைபட்டு கிடந்த நாங்கள் எல்லாம்
ஆர்பரித்து பறந்தோம்மய்யா -உங்கள்
"அக்னி சிறகுகளால்"
அணுகதிர் வீட்சிகலெல்லாம் - எங்கள்
அய்யா அப்துல் கலாமிடம் அடிமை ஆனதோ!
புற ஊதா கதிர்களெல்லாம் - உன்
புன்னகைக்கு அடிமையானதோ!
எவரஸ்ட் சிகரம் கூட ஏங்கி நிற்கிறது
கலாம் என்ற சிகரத்தை தொட்டு பார்க்க
விருதுகளும் விஞ்ஞானமும் வியப்பாய் பார்ததய்யா
நீங்கள் வீரியமான விஞ்ஞானமோ என்று
ஏழ்மையில் பிறந்த எளியவன் கூட
ஏவுகணை விடலாம் என எடுத்துறைத்த
ஏவுகணை அய்யா நீங்கள்
ஏவுகணை எல்லாம் ஏங்குகிறதய்யா
எங்களை எல்லாம் உசுப்பி விட ஒருவன்
இல்லையே என்று
ஏகாதிபத்திய நாடுகள் எல்லாம்
ஏங்கி நின்றதய்யா - உங்கள்
ஏவுகணை சோதனையை பார்த்து
புகழின் உச்சிக்கே சென்ற எங்கள் புகழே
சொத்துக்கள் குவித்திடாத எங்கள் சொத்தே
சட்டங்களும் பட்டங்களும் சலாம் போட்டதையா
எங்கள் அய்யா கலாமிடம்
அய்யா!
நீங்கள் ஏழையாய் பிறந்தீர்கள்
நீங்கள் ஏழையாய் வளர்ந்தீர்கள்
நீங்கள் ஏழையாய் வாழ்ந்தீர்கள்- கடைசியாய்
நீங்கள் ஏழையாகவே இறந்தீர்கள்- ஆனால்
பல கோடி உள்ளங்களை கொள்ளை கொண்ட
கோடீஸ்வரனைய்யா நீங்கள்
எங்களையெல்லாம் விட்டுச் சென்ற இளைஞ்சனே - இனி
எழுச்சி என்றால் எங்கள் அய்யா அப்துல் கலாம் தான் - என
எழுதப் படாத சட்டத்தை இயற்றி விட்டாய்
இளைய சமுதாயம் எங்களிடம்
நான் நினைக்கிறேன் இறப்பு என்பதே
இருந்திருக்காதையா உங்களுக்கு - ஏனென்றால்
எமனும் எட்டு அடி எட்டி நின்றிருப்பானையா - நீ
இன்னொரு ஏவுகணை சோதனை நடத்தி இருந்தால்
அய்யா இன்னும் எவ்வளவோ
எழுதிக் கொண்டே போகலாம் உங்களை பற்றி
ஆனால் என் கவிதையும் கலங்கி போகுதய்யா
என் கண்களோடு சேர்த்து.
-அரி.அன்பு-