Ganesh Rajagopalan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ganesh Rajagopalan
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Jul-2015
பார்த்தவர்கள்:  41
புள்ளி:  2

என் படைப்புகள்
Ganesh Rajagopalan செய்திகள்
Ganesh Rajagopalan - Ganesh Rajagopalan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-May-2021 8:37 pm

*மகா மாயை*

அண்டவெளியில் எண்ணிலடங்கா கருமுட்டைகள் ( கோள்கள்)
"ஈர்ப்பு" எனும் மாயவிசையால் புவிக்கோள(ல) மகள் கொண்டனள் கர்ப்பம், ஈன்றனள் கோடானு கோடி உயிர்கள்

பஞ்ச பூதங்கள் வந்தன, மலைகள் முளைத்தன, பனிமலைகள் இளகின, நீராய் நீண்டு ஓடின
தாவரங்கள் துளிர்த்தன, தரணி செழித்தது
பூக்கள் பூத்தன, பூச்சிகள் பெருத்தன!

மரங்கள் திரண்டன, காடுகள் கண்டன
பறவைகள் சிறகடித்தன, மீன்கள் துள்ளின
ஊர்ந்தவை நடந்து, கால்நடையாயின
காலங்கள் கடந்தன, மனிதன் ஜனித்தான்!

பரிணாம வளர்ச்சியில் பல பரிமாணங்கள் படைத்தான்
பங்காளிச் சண்டைகள் முற்றின, வரப்பைத் தாண்டி, வரம்பு மீறினான்
பார் மொத்தமும் தனக்குத்தான் பாத்தியதை என்றான்
பிந்திப் பிறந்தவன் "பெரியண்ணன்" ஆனான்

பங்காளிகளின் பங்களிப்பில்லாமல் தன்னிருப்புச் சாத்தியமில்லை, இப் பேருண்மையை ஏனோ ஏற்க மறுத்தான்
'பகுத்துண்டு, பல்லுயிர் ஓம்புதலும்', எனும் குறளைப்
புறம் தள்ளி அறவழி மறந்தான்

ஆறறிவுடையவன் நானென ஆணவத்துடன் கொக்கரித்தான்!

ஆறறிவாவது ஒன்றுபட்டு ஓரினமானதா?

குலமும் சாதியும் கண்டு 'தனி'த் 'தனி' ஆனான்...

சுயம் என்பது வெறும் 'நானோ'! அது யாவற்றையும் உள்ளடக்கிய 'யானே' அன்றோ!

மறைந்து தோன்றி, தோன்றி மறைந்து ஆடும் மாய விளையாட்டை முடித்து அண்டவெளித்தாழ் திறக்க, மகாமாயை தாள் வணங்கிடுவோம்.. திறவுகோல் அவளிடமே! 


அன்னை மகா மாயையே போற்றி, போற்றி!!!

கணேஷ் 

மேலும்

Ganesh Rajagopalan - எண்ணம் (public)
28-May-2021 8:37 pm

*மகா மாயை*

அண்டவெளியில் எண்ணிலடங்கா கருமுட்டைகள் ( கோள்கள்)
"ஈர்ப்பு" எனும் மாயவிசையால் புவிக்கோள(ல) மகள் கொண்டனள் கர்ப்பம், ஈன்றனள் கோடானு கோடி உயிர்கள்

பஞ்ச பூதங்கள் வந்தன, மலைகள் முளைத்தன, பனிமலைகள் இளகின, நீராய் நீண்டு ஓடின
தாவரங்கள் துளிர்த்தன, தரணி செழித்தது
பூக்கள் பூத்தன, பூச்சிகள் பெருத்தன!

மரங்கள் திரண்டன, காடுகள் கண்டன
பறவைகள் சிறகடித்தன, மீன்கள் துள்ளின
ஊர்ந்தவை நடந்து, கால்நடையாயின
காலங்கள் கடந்தன, மனிதன் ஜனித்தான்!

பரிணாம வளர்ச்சியில் பல பரிமாணங்கள் படைத்தான்
பங்காளிச் சண்டைகள் முற்றின, வரப்பைத் தாண்டி, வரம்பு மீறினான்
பார் மொத்தமும் தனக்குத்தான் பாத்தியதை என்றான்
பிந்திப் பிறந்தவன் "பெரியண்ணன்" ஆனான்

பங்காளிகளின் பங்களிப்பில்லாமல் தன்னிருப்புச் சாத்தியமில்லை, இப் பேருண்மையை ஏனோ ஏற்க மறுத்தான்
'பகுத்துண்டு, பல்லுயிர் ஓம்புதலும்', எனும் குறளைப்
புறம் தள்ளி அறவழி மறந்தான்

ஆறறிவுடையவன் நானென ஆணவத்துடன் கொக்கரித்தான்!

ஆறறிவாவது ஒன்றுபட்டு ஓரினமானதா?

குலமும் சாதியும் கண்டு 'தனி'த் 'தனி' ஆனான்...

சுயம் என்பது வெறும் 'நானோ'! அது யாவற்றையும் உள்ளடக்கிய 'யானே' அன்றோ!

மறைந்து தோன்றி, தோன்றி மறைந்து ஆடும் மாய விளையாட்டை முடித்து அண்டவெளித்தாழ் திறக்க, மகாமாயை தாள் வணங்கிடுவோம்.. திறவுகோல் அவளிடமே! 


அன்னை மகா மாயையே போற்றி, போற்றி!!!

கணேஷ் 

மேலும்

Ganesh Rajagopalan - Ganesh Rajagopalan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2021 11:48 am

*நிகழும் காலம்*

கடந்த கணங்களின் ரணங்கள் குணமாகும் 

நிகழும் நொடிகளில் நம்பிக்கையோடு நீடித்திருப்போம்

நாளைய நாட்கள் நலமே நல்கும்

முக்காலம் ஒர் முக்கோணக் காதலுக்கு ஒப்பானது

கடந்தது நிகழ்வதை நினைத்திருந்தது, நிகழ்வதோ கழுவுவதில் நழுவுவது, நாளை நோக்கி நகர்வது..

நிகழ் காலத்தின் பிறப்பு எதிர் காலம், நிகழ் காலத்தின் இறப்பு இறந்த காலம், இதற்கு இடைப்பட்ட காலம்தான் வாழ்க்கை, 

அதில் வாழ்ந்து சரித்திரம் செய்வோம், புதிய ராஜ பாட்டையில் புத்துலகம் படைப்போம்,

விதையில் விருட்சம் உண்டுதான்... காலம் கனிந்தால்தான் கனி தரும் விருட்சம் வெளி வரும்.....

அது வரை பொறுத்திருப்போம், நிகழ்வோடு பொருந்தியிருப்போம்.

 மொத்தத்தில் "நிகழ்"த்திக் காட்டுவோம்.... இரா.கணேஷ்

மேலும்

Ganesh Rajagopalan - எண்ணம் (public)
18-May-2021 11:48 am

*நிகழும் காலம்*

கடந்த கணங்களின் ரணங்கள் குணமாகும் 

நிகழும் நொடிகளில் நம்பிக்கையோடு நீடித்திருப்போம்

நாளைய நாட்கள் நலமே நல்கும்

முக்காலம் ஒர் முக்கோணக் காதலுக்கு ஒப்பானது

கடந்தது நிகழ்வதை நினைத்திருந்தது, நிகழ்வதோ கழுவுவதில் நழுவுவது, நாளை நோக்கி நகர்வது..

நிகழ் காலத்தின் பிறப்பு எதிர் காலம், நிகழ் காலத்தின் இறப்பு இறந்த காலம், இதற்கு இடைப்பட்ட காலம்தான் வாழ்க்கை, 

அதில் வாழ்ந்து சரித்திரம் செய்வோம், புதிய ராஜ பாட்டையில் புத்துலகம் படைப்போம்,

விதையில் விருட்சம் உண்டுதான்... காலம் கனிந்தால்தான் கனி தரும் விருட்சம் வெளி வரும்.....

அது வரை பொறுத்திருப்போம், நிகழ்வோடு பொருந்தியிருப்போம்.

 மொத்தத்தில் "நிகழ்"த்திக் காட்டுவோம்.... இரா.கணேஷ்

மேலும்

Ganesh Rajagopalan - Ganesh Rajagopalan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2021 8:43 pm

எமது ஆங்கிலம்
வெறும் அங்குலம் அளவே, ஹிந்தியில் கொஞ்சம் பிந்தித்தான் ! தமிழால் அமிழாதிருக்கிறேன்! தமிழ்ச்சொல் ஒவ்வொன்றும் சுவை மிகு சுளையை ஒத்தது பிழியும் தோறும் வழியும் சாறு

மேலும்

Ganesh Rajagopalan - எண்ணம் (public)
17-May-2021 8:43 pm

எமது ஆங்கிலம்
வெறும் அங்குலம் அளவே, ஹிந்தியில் கொஞ்சம் பிந்தித்தான் ! தமிழால் அமிழாதிருக்கிறேன்! தமிழ்ச்சொல் ஒவ்வொன்றும் சுவை மிகு சுளையை ஒத்தது பிழியும் தோறும் வழியும் சாறு

மேலும்

Ganesh Rajagopalan - Ganesh Rajagopalan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jul-2015 7:58 pm

சித்தம் சீர்பெறும் தேகம் திடம்பெறும்
பித்தம் தணியும் புத்தி தெளிவுறும்
வித்தை மூத்தோர் பயந்த முத்ததை
நித்தமும் பயில யோகம் கூடும்

மேலும்

நன்றி நண்பரே, தங்கள் கருத்துக்கு...... 02-Jul-2015 7:55 pm
உண்மைதான்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 02-Jul-2015 1:01 am
Ganesh Rajagopalan - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jul-2015 8:10 pm

நில் மனிதா நில் , நான் நிலம் பேசுகிறேன்

நில் மனிதா நில், உன்னோடு ஒரு சில நிமிடங்கள்

அயர்ந்து நீ படுக்க, கிடக்க, நடந்து பயில தளம் தருபவள்

பயிர்பச்சை மேனியெங்கும் தரித்து உன்பசி ஆற்றி வளம் சேர்ப்பவள்

உயிர்முச்சுக்கு உன்னத தருக்கள் தந்து உன் நலம் நாடுபவள்

உயிர்களின் தாகம் தணிவிக்க நீர் சுரந்து உளம் பூரிப்பவள்

நீ இடும் கழிவுகள் தின்று, நஞ்சு நீக்கி, உரமாய் ஆக்கி

பயிராய் பரிணமித்து உனக்கே உணவாய் உருமாறுபவள்

உமிழ்ந்தாய், போற்றினாய் தூற்றினாய்

குடைந்தாய் தோண்டினாய் , பின் நீயே அதில் விழவுஞ்செய்தாய்.

அத்தனையும் ஜீரணம், சக்தியாக பரிணாமம், இன்னொன்றாக அவதாரம்

அமுதம் ஊட்

மேலும்

நல்ல சிந்தனை... நிலம் பேசுவதாய் எழுதி இருப்பது சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 02-Jul-2015 11:50 pm
Ganesh Rajagopalan - Ganesh Rajagopalan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2015 7:58 pm

சித்தம் சீர்பெறும் தேகம் திடம்பெறும்
பித்தம் தணியும் புத்தி தெளிவுறும்
வித்தை மூத்தோர் பயந்த முத்ததை
நித்தமும் பயில யோகம் கூடும்

மேலும்

நன்றி நண்பரே, தங்கள் கருத்துக்கு...... 02-Jul-2015 7:55 pm
உண்மைதான்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 02-Jul-2015 1:01 am
மேலும்...
கருத்துகள்

மேலே