கார்த்திகேயன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கார்த்திகேயன் |
இடம் | : Avinashi |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Jun-2017 |
பார்த்தவர்கள் | : 30 |
புள்ளி | : 2 |
குடிகார ஆண்களைப்போல்
நிலாவும்....
என்றைக்காவது ஒருசில நாளில்
பொழுது சாயும்போது வீடுவந்து சேர்வான்...
பெரும்பாலான நாட்களில் நடு இரவு
ஒருசிலநாட்களில் விடிந்தே விடும்...
நிலாவும் அப்படித்தான்....
குடிகார ஆணின் வீட்டில் அடுப்பெரிந்த நாட்களும்
நிலவில் வடைசுடும் கிழவியின் அடுப்பெரிந்த நாட்களும்
நிச்சயம் ஒன்றாக இருக்கும் ....
குடித்துவிட்டு நடு இரவில் வரும் கணவன்
நிலவைக்காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டும் தாய்....
குழந்தைக்கு ஒருவாய் சோறு ஊட்டும்போது
நிலவுக்கும் சேர்த்து ஊட்டுகிறாளே!!!!
குடிகார கணவன் நிலவின் ஒளியில் வீடு வந்து சேரட்டும் என்பதாலா?
இல்லை
என்
கவிதைகள் ஆயிரம்
எழுதிய போது..
கனவில் வந்து
கவிதையாய் மாறியவள்....
இருள்சூழ்ந்த இரவுகளில்
ஒளிச்சுடராய் மாறி
காகிதங்களில் காதல் கதை சொன்னவள்....
மரங்கள் சூழ்ந்த மலைகளும்
கருமேகங்கள் சூழ்ந்த
வானமும்
விழிகளுக்குள் வட்டமிடும்
அவளும்
எனக்குள் இருக்கும் கவிஞன்...
எழுதுகோல் பிடித்து எழுதியபோது
கனவுகள் வந்து தொலைத்தது...
விழிதிறந்து பார்த்தபோது
மை தீர்ந்து போனது...
காகிதங்கள் நிறைந்து
காதல் கவிதை சொன்னது...
இதோ எழுதிக்கொண்டே இருக்கிறேன்...
விரைவில் காகிதமும் மையும்
தீர்ந்துவிடலாம்....
விழிகளுக்குள் வந்து
காதல்கவிதை சொன்னவளுக்கு
மையும் காகிதமும் தீர்ந்தால