Krishnamoorthi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Krishnamoorthi |
இடம் | : |
பிறந்த தேதி | : 07-Dec-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 4 |
srkrishnamoorthi.blogspot.com
நிறை ததும்பும் விழி, ஈரம் உலரா கருங்கூந்தல், இதழும், இதழின் வரிகளும், அவளின் அழகை நெடு நேரமாய் கண்ணாடி முன் நின்று அவளே ரசித்துக் கொண்டிருந்தாள், மஞ்சள் நீராடலில் நனைந்திருந்த அவள் உடல் ஓர் சிற்பம் போல் அந்த கண்ணாடியில் பிரதிபலித்தது, மேலாடை அணியும் முன் அரும்பாத மீசையை முறுக்கி பார்க்கும் இளைஞனைப் போல், தனது பருக்காத மார்பினை மெல்ல வருடி பார்த்துக் கொண்டாள். ஏதோ பெண்மையின் முழுமையை அடைந்ததை போல் அவளுள் ஓர் இன்பக்களிப்பு, ஆடைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கு விரைந்தால் .
அவள் வயதுக்கு வந்ததை ஊர் அறிய திருவிழா போல் கொண்டாடிவிட்டு, அதை யாரிடமும் பகிரக் கூடாத பிரம்
நிலவொன்றே அழகென்றிருந்தேன் காலைக் கதிரவன் காணா வரை,
தனித்து நின்றே வாழ்வினை கொண்டேன்,
நெஞ்சை காதல் களவு கொள்ளா வரை,
முகில் மறைத்த நிலவதனை காண்கையிலே
நாணத்தில் கரம் புதைத்த பெண் விழி தோன்றுதடி,
துச்சமென தூக்கி எரிகையிலே -
காதல் உள்துளைத்து உயிருள் கூடுதடி,
வேதம் என்றே நான் படிக்க வெட்கம் அதை நீ அடைந்தாய்,
சொற்கள் அற்றே நான் திகைக்க கண்கள் கொண்டே கவி படைத்தாய்,
ஐம் பொறியில் நாவொன்றே பொய்யுறையும் என்றிருந்தேன், உனை பிரிந்த நொடி தொட்டு,
ஒலிப் புகும் காதில் இசையென, ஓலமிடும் நாவின் மொழியென, நெஞ்சில் களியேற்றும் உணர்வென, ஆத்ம தீயின் சுவாசமென, காணும் காட்சிகள் யாவுமே நீயென, ஐம் பொறியும்
#A_story_from_Syria
பிரசவ வலி கொண்ட என் மனைவி பிள்ளை பெறப்போகிறாள் எனும் செய்தி கேட்டு அடங்கா மகிழ்வு கொண்டேன். அப்பிஞ்சு மழலையின், தேன்குரல் கேட்க துள்ளி குதித்து ஓடும் ஒரு மானினைப்போல் சாலையில் ஓடினேன். மின்னல் வேகத்தில் எனை விஞ்சி இரு இரும்பு பறவைகள் பறந்தன, அது உதிர்த்த இரண்டு நெருப்புப்பந்துகள் கீழே விழ, பெருத்த ஒலி கொண்டு இரு வெடிகள் வெடித்த வெடிப்பில் காற்றில் ஒரு துகளென வீசி எரியப்பட்டேன். சிந்தனை தெளிந்து எழுந்து நிற்கையில், அடங்காத புழதி படலம் எனை இருள் என மறைத்தது. அப்புழுதியின் உள்ளே என் மனைவி இருந்த கட்டிடம் ஒரு மணல் குவியல் போல் இருந்தது. சரிந்து கிடந்த அந்த குவியலை ஆழ தோண்டி த
தூண்டில் புழு
கருமை தீட்டிய இருள், மேகங்களை வெட்டி வெளிவர துடிக்கும் மின்னல், கொட்டி தீர்க்கும் இந்த மழையின் நடுவே ஓர் நீண்ட நெடிய இரயில் பாலம், அதன் மேலே எங்கோ தூரத்தில் வரும் இரயிலின் ஓசை, பாலத்திற்கு கீழே கட்டுக்கடங்காமல் ஓடும் இந்த ஆறு, திரைப்படத்தின் இறுதி கட்ட காட்சிக்கு ஏற்ற இடம். இதுவும் இறுதிக்கட்டம்தான் என் வாழ்வின் இறுதி கட்டம். ஆம் இன்னும் சிறிது நேரத்தில் என் மரணத்தை தழுவப்போகிறேன். நான் மண்டியிட்டு இருக்கும் இந்த இரயில் பாதையில் வர இருக்கும் இரயில், இல்லை இந்த பாலத்திற்கு கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்று வெள்ளம், இவை அனைத்திற்கும் மேல் என் நெற்றிக்கு நேரே இருக்கும் துப்பாக்கி. இவை