அ முகிலன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அ முகிலன்
இடம்:  விழுப்புரம்
பிறந்த தேதி :  13-Jul-2002
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Nov-2021
பார்த்தவர்கள்:  696
புள்ளி:  8

என்னைப் பற்றி...

கவிஞன், பாவேந்தரின் சுவைஞன்

என் படைப்புகள்
அ முகிலன் செய்திகள்
அ முகிலன் - எண்ணம் (public)
06-Aug-2022 12:24 pm

நிலவு

நிலவே உன்றன் நீசமுகம் நீக்கேன் 

இலகாய் வரட்டும் இப்போதே நல்விடியல்

நாள்கிழமை யாவும் நகராமல் நிற்கட்டும்

நீள்பகலில் வையம் நனையட்டும் 

பாக்க ளெல்லாம் புத்துயிர் பெறவே!

மேலும்

அ முகிலன் - அ முகிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Nov-2021 4:09 pm

மூழ்கியும் இறக்கவில்லை
வெளியேறவும் முடியவில்லை
கால வெள்ளத்தில்

மேலும்

அ முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2021 4:09 pm

மூழ்கியும் இறக்கவில்லை
வெளியேறவும் முடியவில்லை
கால வெள்ளத்தில்

மேலும்

அ முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2021 4:07 pm

அறிவுடைச் சான்றோர் அகன்றஇப் பாரைச்
செறிவுடைச் சொல்லும் அரும்பொருளும் ஏந்தி
அழகுறச் சாற்றிய காகிதக் கற்றைகள்
புத்தக மென்பர்மாந் தர்.


நூல்கள் சிறப்பெனி னும்அத னுட்சிறந்த
நூலெடுத்தே கற்றிடல் வேண்டும், அதனாலே
பெற்றிடப் போகும் அறிவு, உயர்மாந்தர்
என்னும் தகைமை தரும்.

மேலும்

அ முகிலன் - அ முகிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2021 6:54 pm

விடிந்திடும் முன்னே வீட்டின்
முகப்பினில் அமர்ந்தேன்; நற்பா
படைத்திட வேண்டி! சிந்தை,
பக்குவப் படவே இல்லை!
படர்ந்தன வானம் மேலே
பரிதியின் ஒளியின் கைகள்!
கடிதினில் வந்தது எண்ணம்
கவிதனை எழுத லுற்றேன்.

மேலும்

அ முகிலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2021 6:54 pm

விடிந்திடும் முன்னே வீட்டின்
முகப்பினில் அமர்ந்தேன்; நற்பா
படைத்திட வேண்டி! சிந்தை,
பக்குவப் படவே இல்லை!
படர்ந்தன வானம் மேலே
பரிதியின் ஒளியின் கைகள்!
கடிதினில் வந்தது எண்ணம்
கவிதனை எழுத லுற்றேன்.

மேலும்

அ முகிலன் - அ முகிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2021 8:19 pm

நீல வானம் காரிருளைப் போர்த்த

காலம் வந்த தென்றெண்ணி உள்ளம்

பூத்தனரே மாந்தர், வையம்

பூத்தது மழைமண் கொண்ட வன்பாலே.

மேலும்

அ முகிலன் - அ முகிலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2021 8:36 pm

அறுசீர் விருத்தம்

(விளம் மா தேமா)

உருவிலாக் காற்றே உன்னை
உயிருள மட்டில் நாளும்
பருகுவோம் வாழ்தல் வேண்டி!
பசுமலர் ஊடாய்ச் சென்று
ஒருவிதப் போதை தந்தாய்!
ஓய்ந்திடும் தேகம் தீண்டி
மருளினைத் தந்தாய்! உன்னை
வழங்குவேன் தோழன் என்றே!

- அ. முகிலன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே