கவிஞர் நளினி விநாயகமூர்த்தி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிஞர் நளினி விநாயகமூர்த்தி
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-May-2021
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  7

என் படைப்புகள்
கவிஞர் நளினி விநாயகமூர்த்தி செய்திகள்

நீ மன்னிக்காத தருணங்களை
நினைவூட்டி எச்சரிக்கைப்படுத்துகின்றன
நீ வீசிய பாத்திரத்தின் வளைவுகள் !!!

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

மேலும்

கருப்பு மை ஏந்தும் மடல்
சுபச் செய்தியோடு வாராதென்பர் -
ஆனாலும் அதிசயமாய் -
அசுபச் செய்தி தாங்காமல் -
சுபச் செய்தியோடு மட்டுமே வருகின்றது
உன் விழியெனும் மடலேந்திய மை !!!

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

மேலும்

சாதித்தே தோற்றாலும்
சாதித்தே வென்றாலும்
சாதிப் பார்க்கும் கூட்டமடா.... !

இனவெறிக்கு எதிராக
இங்கே கைகள் உயர்ந்ததடா
சாதிவெறிக்கு எதிராக - உன்
சரித்திர கைகள் உயர்த்தடா...!

விளையாடும் களமும்
போராட்ட களம்தான் - உன்
சாதனை குறியீடும்
சமுதாய விழிப்புணர்வுதானடா...!

உதாசீன கூட்டத்துக்கு - நீ
உதாரண கூட்டமடா -
உரசும்முன் நீ கல்தானடா -
உரசியபிறகு நீயொரு தீ தானடா....!

தோற்றலும் கற்றல்தான் -
கற்றலும் மாற்றம்தான் -
மாற்றமும் பேராற்றல்தான் -
பேராற்றலும் நம் வரலாறுதானடா !

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

மேலும்

காதலியற்ற ஒத்தையடிப் பாதையில்
காலாற நடந்துச் செல்கையில் -
காலங்கள் செலவாகி -
காதலியின் நினைவுகள் வரவானது...!!!

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

மேலும்

உன் விழிகள் என்ன
நீட் தேர்வுக்கான வழிமுறையா ?
ஒரு புறம் போராட்டத்தையும்
மறு புறம் தேர்வையும் நடத்துகின்றதே -
இதில் நான் போராட்டத்தில் ஈடுபடவா ?
இல்லை தேர்வில் கலந்து கொள்ளவா ?

- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே