PrabhuKumar Nageswari - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  PrabhuKumar Nageswari
இடம்:  Madurai
பிறந்த தேதி :  04-Apr-1992
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Mar-2019
பார்த்தவர்கள்:  200
புள்ளி:  16

என் படைப்புகள்
PrabhuKumar Nageswari செய்திகள்
PrabhuKumar Nageswari - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2019 12:18 pm

நிலவே உன்னை நித்தம் எண்ணி
நித்திரையில் தீக்குளிக்கிறேன்...
கனவாய் நீ கலைந்து போக
கண்ணில் கண்ணீர் வடிக்கிறேன்...
ஏதோ ஒன்று என்னிடம் சொல்ல
வருகிறாய் என்று நினைக்கிறேன்...
சொல்லும் அந்த சொற்களில் இடறி
திரும்பிச் செல்வதால் துடிக்கிறேன்...
காலையில் தினம் உன்னைக் காண
வானத்தில் நானும் கலக்கிறேன்...
மீண்டும் நீ இரவில் வலம்வர
நினைவில் தவம் இருக்கிறேன்...

பௌர்ணமியாய் சிலநாள்
முழு இரவாய் சிலநாள்
மாற்றங்கள் ஏற்று மீண்டும்
மறுஜென்மம் எடுக்கிறாய்...

காதலில் உன்னை வெறுப்போர் இல்லை
காயத்தில் உன்னை மறப்போர் இல்லை..
வெறுப்பதும் மறப்பதும் காதல் என்றால்,
அந்த காதலே எனக்கு உன்மேல் இல்லை...

மேலும்

PrabhuKumar Nageswari - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2019 11:51 am

பரந்த வானில்
தொலைந்த நட்சத்திரங்கள்
அவளது நினைவுகள் ...

தொட முடியாவிட்டாலும்
தொடர்ந்துகொண்டே இருக்கும்
அவளது நினைவுகள் ...

காலத்தாலும் கலைக்க முடியாத
கரு ,அவளது நினைவுகள் ...

எதிர் பார்க்காத இடத்திலும்
ஏமாற்றம் தரும்
அவளது நினைவுகள் ...

குடைக்குள்ளும் மழையாய்
அவளது நினைவுகள் ...

கூரையிலும் கோபுரமாய்
அவளது நினைவுகள் ...

அடியின் வேராய்
அவளது நினைவுகள் ...

ஆழத்தின் விழுதாய்
அவளது நினைவுகள் ...

மேலும்

PrabhuKumar Nageswari - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2019 8:00 pm

தேடாமல் கண்டெடுத்த
தெய்வத்தைவிட்டு
தேடித் திரிந்தேன்
தெருக்கள் எல்லாம்...

அம்மா!!!
நீ திட்டும் பொழுதெல்லாம்
சீண்டினேன் -இன்று
உன் திட்டல் என்னைத் தீண்ட
வேண்டினேன்...

காற்றுடன் போட்டியிட்டேன்
சுற்றித்திரிய - இன்று
காத்திருக்கிறேன் உன்
கட்டுப்பாட்டில் கிடக்க...

ஆசைகள் ஆயிரம் உண்டு
அன்னை உன் மடியில் படுத்து பேச,
இருந்தும் நாட்கள் கிடைக்கவில்லை
உன்னை காண...

அம்மா ,
உன்னை கட்டியணைத்து
கதைகள் பல பேசவேண்டும்,
உன்னை பிரிந்து நான்
பட்ட வேதனையையும்
தொட்ட துயரத்தையும்
கண்ணீரில் பேச வேண்டும்..

எங்கேயோ நீ- உன் நினைவில்
இங்கே நான்.
வாழ்க்கை தேடி

மேலும்

உங்களின் வழி உங்களின் வரிகளில் தெரிகிறது; உங்களின் ஏக்கங்களை தீர்த்து வைக்க அன்னை இப்போது வருவது சற்று கடினமே; இருந்தும் உங்களின் அன்பை உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது உங்களின் அன்னை உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு சற்று உண்டு. அல்லது உங்கள் குழந்தைக்கு அன்னையின் அன்பு மிகுதியாகக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இவற்றில் மட்டுமே உங்களால் உங்கள் அன்னையைத் தேடி ஆறுதல் அடைய முடியும். நல்ல பா, உங்களுக்கு என் வாழ்த்துக்கள். 26-Mar-2019 12:34 pm
PrabhuKumar Nageswari - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2019 7:54 pm

கண்கள் என்னும்
மேடையில் நடனமாடும்
நாட்டிய தேவதை!!

இவள் ஆடும் நடனமோ
அவனை கண்டால் மட்டும்
அதிகரிக்கும்.....

மேலும்

நல்லா இருக்கு 26-Mar-2019 12:35 pm
மேலும்...
கருத்துகள்

மேலே