கற்பனையில் சில
நிலவே உன்னை நித்தம் எண்ணி
நித்திரையில் தீக்குளிக்கிறேன்...
கனவாய் நீ கலைந்து போக
கண்ணில் கண்ணீர் வடிக்கிறேன்...
ஏதோ ஒன்று என்னிடம் சொல்ல
வருகிறாய் என்று நினைக்கிறேன்...
சொல்லும் அந்த சொற்களில் இடறி
திரும்பிச் செல்வதால் துடிக்கிறேன்...
காலையில் தினம் உன்னைக் காண
வானத்தில் நானும் கலக்கிறேன்...
மீண்டும் நீ இரவில் வலம்வர
நினைவில் தவம் இருக்கிறேன்...
பௌர்ணமியாய் சிலநாள்
முழு இரவாய் சிலநாள்
மாற்றங்கள் ஏற்று மீண்டும்
மறுஜென்மம் எடுக்கிறாய்...
காதலில் உன்னை வெறுப்போர் இல்லை
காயத்தில் உன்னை மறப்போர் இல்லை..
வெறுப்பதும் மறப்பதும் காதல் என்றால்,
அந்த காதலே எனக்கு உன்மேல் இல்லை...
உன்னைச் சுற்றி விண்மீன் எல்லாம்
காதல் சொல்ல தவிக்கையில் - ஏனோ
உன் பொன்மனம் மட்டும் சூரியனைச் சுற்றி வருவதேன்....