harikharan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : harikharan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 26-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 2 |
( லாரியில் கொண்டு செல்லப்படும் ஒரு மாட்டின் மொழியில் பிறந்த கவிதை. அண்மையில் இணையத்தில் மாடுகளின் அவலம் பற்றி வந்த ஒரு புகைப்படத்தின் தாக்கத்தில் எழுதிய வரிகள் )
ஆ !! வலிக்குது வே !
கொஞ்சம் பைய போங்களேன்.
மந்த மந்தயா லாரிலே கட்டி
சந்த சந்தையா கூட்டிட்டு போறேளே,
நோவுது வே !
பசிக்குது வே !
புல்லும் புண்ணாக்கும் நல்லா இருக்குமே,
நெல்லு அடிச்ச வைக்கோலும்
நல்லா இருக்கும் வே ,
தின்னு பாக்க கூடாதா ? பாவம்
எங்கள கொன்னு தான் திங்கணுமா ?
தப்பென்ன செஞ்சேன்னு சொல்லுங்க எசமான்,
பருத்தி கொட்ட வேணும்னு உன்னைய
வருத்தி எடுக்க மாட்டேன் ,
கொசு கடிச்சாலும் குளிரு அடிச்சாலும்
சத்தம் இனி
போரெனின் அரியெனச் சீறி வெல்லும்
பேராண்மைத் தசரதன் குலத்து மாணிக்கம்,
கம்பன்தன் தமிழ் வரிகட்கும் எட்டாத
ஒப்பற்ற அழகன், அவன்தன் விரிமார்
விரித்துப் பருத்த தோளில் கோதண்டம்
தரித்துப் புவனம் வலம்வருவது காணின்
உருகித் தன்னிலை மறக்காதோருளரோ !
அரக்கர் குலச்செம்மல் சிரம் பத்துடையோன்
அருமைத் தமக்கை பாவி சூர்ப்பணகை
இராமனைக் கண்ட கணத்தில் மோகித்து
கரியுரு தவிர்த்து மாயவுரு எடுத்தது
பிழையென மொழிவீரோ ? இவ்வுலகு யாக்கை
இழந்தபின் மாலன் மடிசேர் நல்வினைசெய்
ஆழ்வாரும் அவியுணவு உண்ணும் தேவரும்
ஆழ்கடல் குதித்துப் பார்மகள் காத்தப்
பிழையிலாப் பரந்தாமன் திருமேனி கண்டு
தொழுதொழுகி நிற்பாரே ! நிகரில்லா ம