கவிரன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : கவிரன் |
இடம் | : மதுரை |
பிறந்த தேதி | : 27-Aug-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 92 |
புள்ளி | : 6 |
ஒரு துளி தேனில் ஓராயிரம் கடலை புகுத்தும் கவிதையை கற்றுக்கொண்டிருப்பவன்...!
பயணம்
எல்லாவற்றையும்
மாற்றிவிடுகிறது..
நண்பர்களுடனான பயணம்
உற்சாக சிரிப்பினூடனோ
கிண்டல், கேலி நிகிழ்வினிடனோ
கழிகிறது ...
உறவினர்களுடனான பயணம்
பாதுகாப்புனூடனோ
பதற்றத்துடனோ
கழிகிறது..
மனைவியுடனான பயணம்
மத்திமமாகவே
கழிகிறது...
காதலியுடனான பயணம்
கலக்கத்துடனே
கழிகிறது...
அலுவலர்களுடனான பயணம்
அலுவலகமாகவே
கழிகிறது..
தனிமைப் பயணம்
இன்னும் கடினம்..
புத்தகமும்
அலைபேசியுமாக
கழிகிறது..
ஆக..
பயணம்..
வெறும் பயணமாக மட்டுமே இருப்பதில்லை..!
அது பயணமாக இருக்கும் பட்சத்தில்..!!
~ ராஜசேகரன் (கவிரன்)
வேலை முடிந்து,
வீட்டிற்கு செல்லும் வழியில்
நினைவு வந்தது,
என் செல்லக் குழந்தையின்
சின்ன வேண்டுகோள்...
"அப்பா... வரும் போது
டெடி பியர் பொம்மை வாங்கிட்டு வாங்க.."
அவசர அவசரமாக,
கடை, கடையாக ஏறி இறங்கினேன்..
எதுவும் என் செல்லத்திற்கு
பிடித்த மாதிரி இல்லை...
சில முறைத்தும்,
சில விறைத்தும்,
சில நீண்டும் ,
சில மாண்டும்,
என்ன செய்ய..?
என்ற குழப்பத்திலே
நொடி நகர, நகர..
நரகமாக...
ஒரு வழியாக கண்டேன்,
என் செல்லத்தின் செல்லத்தை..
தன்னை கொண்டுபோய்
சேர்த்துவிடு என்றபடி,
கைவிரித்து அழைத்தது...
டெடி பியர் வாங்கிய,
மகிழ்ச்சியோடு...
வீட்டிற்கு புறப்பட்டேன்..
வழி
மலரே உறிஞ்சும்,
மரகத தேனீ நீ..!!
***************
நீ மருதாணி வைத்துக்கொள்ள,
ஆசைப்படுகிறாய்...
அந்த செய்தியைக் கேட்டமாத்திரமே
சிவந்து போனது மருதாணி..!!
***************
ஒரு கண்ணால் போதையேற்றுவும்
மறு கண்ணால் அதை முறிக்கவும்
செய்யும் வசியக்காரி நீ....
உன்னிடம் வசியம் போகவே
காத்திருக்கிறது என் இதயம்...
***************
என்ன ஒரு அதிசியம்..?
உன் மேனி தொட்டும்
இன்னும் கொதித்துக்கொண்டிருக்கிறதே
சூரியன்....!!
***************
எத்தனை முறை,
என் இதயவீட்டை,
பூட்டினாலும்...
அத்தனை முறையும்,
உன் கண்கள் எனும்,
கள்ளச்சாவி மூலம்,
திறந்துவிடும் கள்ளி நீ...!!
என் மனதோ,
தாயைக்கண்ட கு
வேலை முடிந்து,
வீட்டிற்கு செல்லும் வழியில்
நினைவு வந்தது,
என் செல்லக் குழந்தையின்
சின்ன வேண்டுகோள்...
"அப்பா... வரும் போது
டெடி பியர் பொம்மை வாங்கிட்டு வாங்க.."
அவசர அவசரமாக,
கடை, கடையாக ஏறி இறங்கினேன்..
எதுவும் என் செல்லத்திற்கு
பிடித்த மாதிரி இல்லை...
சில முறைத்தும்,
சில விறைத்தும்,
சில நீண்டும் ,
சில மாண்டும்,
என்ன செய்ய..?
என்ற குழப்பத்திலே
நொடி நகர, நகர..
நரகமாக...
ஒரு வழியாக கண்டேன்,
என் செல்லத்தின் செல்லத்தை..
தன்னை கொண்டுபோய்
சேர்த்துவிடு என்றபடி,
கைவிரித்து அழைத்தது...
டெடி பியர் வாங்கிய,
மகிழ்ச்சியோடு...
வீட்டிற்கு புறப்பட்டேன்..
வழி
முத்தம் நிகழ்வைவிட,
அதற்கு ஆயத்தமாவது,
அத்தனை அழகு..!
முதல் முத்தம்,
எப்படிக் கொடுக்கலாம் ?
பாரத்தவுடன்,
இதழோரம் புன்னகைத் தவழுமே,
அந்த சமயம் ?
இருக்கையை சுரண்டிக்கொண்டே
விழிகளை கட்டியணைப்பாளே
அந்த சமயம் ?
எதேச்சையாக விரல்களை தொட்டவுடன்,
மின்சாரம் பாயுமே,
அந்த சமயம் ?
அலைபேசியை பாரக்கும்நொடியில்,
தோள்கள் உரசிக்கொள்ளுமே,
அந்த சமயம் ?
ஏதுமறியாக் குழந்தையைப்போல,
அடிக்கடி முகபாவணைகளை மாற்றிக்கொள்வாளே,
அந்த சமயம் ?
தொடும் தூரத்திலிருந்தாலும்,
தொடாமலே கட்டியணைப்பாளே,
அந்த சமயம் ?
.
.
.
முத்தம் நிகழ்வைவிட,
அதற்கு ஆயத்தமாவது,
அத்தனை அழகு..!
அவஸ்தைய