செல்வன் ராஜன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : செல்வன் ராஜன் |
| இடம் | : கும்பகோணம் |
| பிறந்த தேதி | : 09-Apr-1961 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 01-Aug-2022 |
| பார்த்தவர்கள் | : 193 |
| புள்ளி | : 38 |
மொழியால் தமிழன், உணர்வால் இந்தியன், இனத்தால் ஆசியன், எண்ணத்தால் இந்த உலகத்தின் ஒரு மானுடன் . யாதும் ஊரே !!! கேளிர்!!!
ஆதி மனிதனுக்கு
வாழ்க்கையே பயிற்சியானது;
எழுந்து உட்கார்ந்து ,
நடந்து பேச
நேரமில்லை.
ஓடிக்கொண்டே இருந்தான்.
இரைக்காக ;
தன்னையும் ;
தன் இனத்தையும் ;
காக்க ....
அதுவே அவனுக்கு
யோகம் ஆனது.
மூச்சுக்கு பயிற்சி
அவன் கொடுத்தான்.
மனம் சுத்தமானது;
எதையும் ஏற்றுக் கொண்டது .
திரும்பிப் பார்க்க நேரமில்லை ,
காலத்தை கடந்து அவன்,
பயணம் தொடர்ந்தது.
கால ஓட்டத்தில் ,
கலாச்சார வெளியில்,
மாற்றம் காணத்
தொடங்கினான்.
எல்லாம் வந்தது !
எதற்கு வந்தது ?
ஏன் வந்தது ?
எப்போது போகும் ?
என்கிற நிலையில் !
வளர்ச்சி ! வளர்ச்சி !!வளர்ச்சி !!!
கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.
Consumerism is a devil ,
Materialism is a
ரகசியங்களின் ரகசியம் !!!
நாமே பரம்பொருள் !
நாமே கடவுள் !
நமக்குள்ளே நம்
அமைதியை தேடுவோம் !
அந்தத் தேடுதல்,
நமக்கு அமைதியை,
கொடுக்கும்.
நம்மை பிரிந்தவர்கள்,
எங்கேயும் போகவில்லை.
நம் சிந்தனையில் ;
நம் செயலில் ;
நம் விளைவில் ;
நம் அனுபவத்தில் ;
நம் அனுமானத்தில் ;
நம்மை வழிநடத்தி
நம்மை முடக்காமல்
முன்னேற வைப்பவர்கள் .
நாமே பரம்பொருள் !
நாமே கடவுள் !!
ஒரு ரகசியம் ஒன்று உங்களுக்கு சொல்கிறேன்.
நமக்கு உள்ளே செல்ல செல்ல நம்மை நாம் ஒரு பொருளாக , செயலாக, உயிராக , இதன் ஊடாக மனிதனாக நினைக்கிறோம்.
எதுவும் நம்மால் முடியும் என்கிற சிந்தனை பெரிது அல்ல.
என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?
ஆம் ! அது தா
என்னதான் கஷ்டம்
வந்தாலும் முட்டி
மோது ;
முரண் படு ,
முடிவுக்கு வராதே ,
வாழ்க்கை இன்னும்
முடியவில்லை .
வாழ்வது ஒரு யாகம் ,
அதில் வீழ்வதை விட,
ஜோதியாக மாறு ;
மன்றாடு, மண்டியிடு
மதி கெட்டுப் போகாதே ,
பொறுமைக்கு பெருமை சேர்
பார்த்தால் பரவசம் அடையாதே ?
உலகத்தில் பற்று வை
உள்ளத்தை கொடு;
உணர்வை கட்டி எழுப்பு
உண்மையாக இரு....
எதற்கும் அஞ்சாதே
அமைதியை நாடு,
ஆணவம் கொள்ளாதே
இப்படி சொல்வதால்
வாழ்க்கை என்ன அவ்வளவு
எளிதா ? என்று எள்ளி
நகை யாடாதே !!
ஆம் ! வாழ்வது தான்
சிறந்தது .
உன்னிடத்தில் இருந்து தொடங்கு....
முயன்ற வரை முயற்சி செய் !
முடியாதவை என்பது மற்றவரின் கணக்கு; நமக்கு ஒரு
தொடர் போ
நான் " மற்றும் என்னுடை " எண்ணம்"
இப்படிச் சொன்னால் 'எனக்கு புரியும் என்று நான் நினைக்கிறேன்'......
அதாவது" நான்" உயிருடன் இருக்கும் போது ' என்னை நானே' கொண்டாடிக் கொண்டு இருப்பது இல்லை.
அப்படி ஆனால் " நான் " இப்போது இறந்து பின் ஆவியாக பேசுகிறனா? நான் ஒன்றும் " P T சாமி" ( பிசாசு கதை எழுத்தாளர்) இல்லை.
இப்போதே விஷயத்துக்கு வருகிறேன்.
எவ்வளவுக்கு, எவ்வளவு நான் என்னை சுயநலமாக எண்ணி என்னைப் புரிந்து கொண்டு செயல்படுகிறேனோ !! அவ்வளவுக்கு, அவ்வளவு நான் பிறரைப் பற்றிய புரிதல் மற்றும் சமூக அக்கறை ஆகியவற்றில் தெளிந்து , சிந்தனையுடன் செயல்பட்டு ஒரு பொறுப்பு உள்ள குடி மகனாக வாழ பழகிக் கொள்ள முடியும்
எங்கள் வீட்டின் அருகே அரசலாறு பாய்ந்து ஓடுகிறது.
பாய்ந்து ஓடும் - காவேரியில் தண்ணீர் திறந்து விடும் போது; மற்ற நேரங்களில் சிறு சிறு ஓடையாய் தென்படும்.
நீர் ஓடைகள் நீர் திட்டுகளாக மாறும். பிறகு திட்டுகளில் மணல் சுரண்டப்பட்டு பள்ளமும், படுகுழியுமாகவும் காட்சி தரும்.
இது நடைமுறை நிகழ்வு.
இந்த நீர் திட்டுகளின் ஓரம் பாத்தி கட்டி , நாத்து நட்டு , நீர் பாட்சி , பயிரிட்டு சாகுபடியும் நிகழும்.
ஒரு புறம் காவேரி தாய் நெகிழியை சுமக்கிறாள் ; மறுபுறம் இருக்கும் வீடுகள், மருத்துவ மனைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் இருந்து வந்து சேரும் கழிவுகளும் காவேரியின் கிளை ஆறுகளை அலங்கரிக்கும் கண்ணீர் ப
வணக்கம். 400 கவிஞர்கள் நூலாசிரியர்களாக இணைந்து படைத்த வரலாற்று சிறப்பு மிகுந்த "கவிநானூறு" எனும் நூலினை 46 வது சென்னைப் புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் வெளியிட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் அடுத்த முயற்சியாக 47 வது சென்னைப்புத்தகக் காட்சியில் கீதம் பதிப்பகம் மூலம் சனவரி 2024 ஆம் ஆண்டு வெளியிடும் நோக்கில் "ஐந்திணை ஐந்நூறு" எனும் மரபு நூலினை 500 கவிஞர்கள் இணைந்து படைக்க திட்டமிட்டுள்ளோம். குறிஞ்சியைப் பற்றி 100 பாவலர்களும், முல்லையைப் பற்றி 100 பாவலர்களும் , மருதம் பற்றி 100 பாவலர்களும், நெய்தல் பற்றி 100 பாவலர்களும், பாலையைப் பற்றி 100 பாவலர்களும் என ஐந்து திணைகளைப் பற்றியும்
காக்கை குருவி எங்கள் ஜாதி - பாரதியார்
ஐய பேரிகை ஐய பேரிகை கொட்டடா!
-கொட்டடா ஐய பேரிகை கொட்டடா!
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
(ஐயபேரிகை)
2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.
(...)