தள நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் வணக்கம்..! சரியோ.. தவறோ.....
தள நண்பர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் வணக்கம்..! சரியோ.. தவறோ.. நானும் எழுத்துக் குழுமத்தில் நுழைந்து எதையோ எழுதுகிறேன் என்ற பெயரில் கிறுக்கி... மகிழ்வித்தோ கஷ்டப் படுத்தியோ.. சிலவற்றை எழுதி.... ஒரு தொடரை எழுதி முடித்திருக்கிறேன். அந்தத் தொடர் " முதுகெலும்பி " என்னும் பெயரில் தளத்தில் வாசிக்கக் கிடைக்கும்.
இதுவரையில் எனக்கு இந்தத் தொடருக்காக ஊக்கமளித்து கருத்திட்டுப் படித்து வந்த அனைத்து சக நண்பர்களுக்கும் நன்றி..
இந்தத் தொடரை என்னை எழுத வைக்க எனக்கு கிரியா ஊக்கியாய இருந்த எந்தையார் திரு. அகன் அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியினை நெகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பாருங்கள்.. வாசியுங்கள்.. விமர்சியுங்கள்.. அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ..