எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பார் புகழும் பாவலரும் பார் ஆளும் மன்னவரும் சீர்...

பார் புகழும் பாவலரும் 
பார் ஆளும் மன்னவரும் 
சீர் மிகுந்த இந்நாட்டை 
செப்பனிட்டு கோலோச்ச ,
யாமறிந்த புலவரிடை
யாதுமாய் நிறைந்தவராய் 
பாரதியும் அவர் தாசனாரும்
பழமை கிழித்தெறிந்து 
பகட்டில்லா வாழ்வு வாழ்ந்து 
பல சித்தர்கள் வாழ்ந்த மண்ணில் 
தமிழன்னைக்கு புகழ் சேர்த்தபின்னே
தமிழுக்கு சேவை செய்து ..
தன்னலமின்றி பணி செய்து 
தமிழ் சுவை நீர் பாய்ச்சி 
களை நீக்கி ..உழுதும் எரு இட்டும் 
எழுத்து வலைத்தளம் தனையே
விளை நிலமாக்கி தமிழ் அறுவடைதான் 
மூன்று போகம் முன்னெப்போதுமின்றி
மகசூல் காட்டி அசர வைத்த 
அரிய தமிழ் இளைஞர் ..
அகன் என்னும் அமிர்தகணேசன் 
அவர்தம் தொண்டு கண்டு 
வியக்காதார் யாருமில்லை..
நல்லிளைஞர்..இவர் தம் 
படைப்புகள் பரிமாறி விருந்தளித்து 
ஈரோட்டு மகாகவி திறம் அறிந்து 
இருக்கின்ற ஞானத்தோடு 
இன்னும் நிறைய சேர்த்ததோடு 
என் போன்ற பேர்களுக்கு 
உரமிட்டு தமிழுக்கு அறிமுகம் செய்தார் ..
எண்ணற்ற கவிஞர் பலர் இவராலே உருவானார் ..
நன்றி என்ற வார்த்தை சொல்லி 
நயமாக நழுவிடவே யாரும் எண்ணார்
இவர் இடுகின்ற தமிழ் கட்டளைக்கே 
இன்முகத்தோடு அவர் காத்திருப்பார்..
இனிதாய் என்றுமவர் 
வளமோடு வாழ்ந்திடவே 
கரம் கூப்பி வேண்டிடுவோம் ..
விழைந்திடுவோம்..!



பதிவு : கருணாநிதி
நாள் : 24-Oct-15, 8:59 pm

மேலே