கருணாநிதி - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கருணாநிதி
இடம்:  பாண்டிச்சேரி-திருச்சி
பிறந்த தேதி :  25-Jun-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Aug-2014
பார்த்தவர்கள்:  6739
புள்ளி:  4422

என்னைப் பற்றி...

இலக்கண-இலக்கிய பரிச்சயமில்லாத ஆனால் தமிழில் எழுத ஆர்வமுள்ள ஒரு தமிழன்!

என் படைப்புகள்
கருணாநிதி செய்திகள்
கருணாநிதி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2017 6:40 am

எவ்வளவு அழைத்தும்
வரவில்லை ..காக்கை
அமாவாசை ..
எனக்கோ பசி ..!

நான் மூன்று பருவத்தினனாகவும்
மாறி மாறி பேசிப் பார்க்கிறேன் ..
அவள் புன்னகையில்
சந்தேகம்!

இளங்குளிர் காற்றில்
பனிமலையில் அவளோடு
கைகோர்த்தபடி நடக்கிறேன்..
இளஞ்சூடு !

அவள் உதிர்க்கும்
ஒவ்வொரு வார்த்தையையும்
மனனம் செய்து கொள்கிறேன் ..
உதவும்..!

ரசிப்பதை
மறைத்துக் கொள்கிறேன்
உலக விஷயங்கள்
பேசிக்கொண்டே !

ஏதோ ஒரு பறவையின்
அந்தி நேர கூவல்
அவளது வளையோசை
பிடிக்கிறது !

புரிபடாத அவளின் நகர்வுகள்
மேலே ஒரு பறவை
நிழலின் வழிதான்
பயணம் !

பக்கத்தில் ஆறு
எங்களோடு கூடவே
நகர்கின்றது ..மனமின்றி
தொடாமல் !

மேலும்

கருணாநிதி - எண்ணம் (public)
21-Nov-2017 6:38 am

 எவ்வளவு அழைத்தும்
வரவில்லை ..காக்கை
அமாவாசை ..
எனக்கோ பசி ..!



நான் மூன்று பருவத்தினனாகவும் 
மாறி மாறி பேசிப் பார்க்கிறேன் ..
அவள் புன்னகையில்
சந்தேகம்!

இளங்குளிர் காற்றில்
பனிமலையில் அவளோடு
கைகோர்த்தபடி நடக்கிறேன்..
இளஞ்சூடு !


அவள் உதிர்க்கும்
ஒவ்வொரு வார்த்தையையும்
மனனம் செய்து கொள்கிறேன் ..
உதவும்..!


ரசிப்பதை
மறைத்துக் கொள்கிறேன்
உலக விஷயங்கள்
பேசிக்கொண்டே !
ஏதோ ஒரு பறவையின்
அந்தி நேர கூவல்
அவளது வளையோசை
பிடிக்கிறது !


புரிபடாத அவளின் நகர்வுகள்
மேலே ஒரு பறவை
நிழலின் வழிதான் 
பயணம் !


பக்கத்தில் ஆறு
எங்களோடு கூடவே
நகர்கின்றது ..மனமின்றி 
தொடாமல் !


மழை வரும் போலிருக்கிறது
என்கிறேன் ..
குடை வேண்டாம்..
வரட்டும் என்கிறாள் !....கருணா....  

மேலும்

கருணாநிதி - எண்ணம் (public)
21-Nov-2017 6:36 am

  வளைந்து ஏறி இறங்கி குறுகி பெருகி ஓடும் இந்த ஆஸ்திரேலிய மலைப்பாதையில் கீழே கடல் கூடவே வருவதை ரசித்தபடி பயணம் ..இடையிடையே மழையும் இளம் வெயிலும் மாறி மாறி ..பச்சைப் பசேல் ..மழைக் காடுகள் வலது புறம் மலைச்சாரலில் ..கீழே மகா சமுத்திரம் நீலம்..நீலம் ..மார்பில் வந்து மோதும் சில்லென்ற ஊசிக்காற்று..வேடிக்கை பார்க்க வந்து அச்சத்திலோ வெட்கத்திலோ எகிறித் தாவி ஓடி மறையும் கங்காருகள் ..அழகின் உச்சம் !நீளும்..பாதை 


***


குளிரும் நிலம், காற்று 
வானின் கொடை..குடை!  

மேலும்

ஆஸ்த்திரேலியாவா----நீண்ட பயணக் கட்டுரை எழுதலாமே ! நாலு வரியில் முடித்துவிட்டீர்கள் ! ஆஸ்திரேலியா என்றால் அழகு தாவி ஓடும் கங்காரு சிரிக்கும் பறவை பூமியில் இயற்கையின் சொர்க்கம் கவிஞனுக்கு அருட் கொடை ! 21-Nov-2017 10:20 am
கருணாநிதி - எண்ணம் (public)
21-Nov-2017 6:33 am

  சந்தோஷம்..மரத்தின் இலைகளை தீண்டும் காற்றுக்கா ..குளிர் தீண்டலில் இன்பம் கண்ட இலைகளுக்கா..? சோர்வு ..கரை தொட்டு திரும்பும் அலைகளுக்கா ..தன்னோடு இருந்துவிட விதியில்லை இந்த அலைக்கு என்று மருகும் கரைக்கா? உனக்கு பதில் தெரியும் ..சொல்லேன்..


***

அலைகளின் தீண்டல்களில் கரை 
காற்றின் தொடுதலில் இலைகள் 
அத்தனையும் எனக்குள் நீயாக !  

மேலும்

முரளி அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Mar-2015 12:17 pm

அம்மா!

அம்மாவுக்கு இன்னொரு பெயர் 'உழைப்பு'. எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாள். சும்மா இருப்பது என்பது ரொம்ப கம்மி. இப்பவும் நான் அந்த கல்யாண மண்டபத்தின் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க கீழே கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தன் தங்கையின் இரண்டாவது பெண்ணின் கல்யாணம். இன்னும் கல்யாண வேலைகளை முழுமையாக கான்ட்ராக்டில் விட ஆரம்பிக்காத காலம். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன். எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். கொஞ்ச நாட்களாக தம்பி குடும்பத்துடன் கோழிக்கோட்டில் இருக்கிறாள். கல்யாணத்திற்க்காக ஒரு வாரம் முன் வந்திருந்தாள்.

நான் மாடியிலிருந்து பார்த்த

மேலும்

பிறந்த ஊருக்கு நெடுநாட்களுக்கு பின் வருவது போலத்தான்..நலம் சார் .. 21-Nov-2017 8:38 am
வணக்கம் ஐயா!! நெடு நாட்களுக்குப் பின். நலமா? 21-Nov-2017 8:31 am
இது பதியப்பட்ட நேரம் நான் மனைவியுடன் ராமேஸ்வரத்தில் இருந்ததும் (அப்போது டூரிங் இடையில் உங்களோடும் நண்பர் ராஜன் சாரோடும் பேசிக்கொண்டிருந்தேன் போனில்) இதை இப்போதுதான் காண நேர்ந்ததும் ..என்ன சொல்வது என்று தெரியவில்லை ..ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து 03 - 02 -2017 ல் இந்நிகழ்வு எனக்கு நேர்ந்தது அன்று காலையில் நீங்கள் அறிய ..மீண்டும் என்ன சொல்வது என்று திகைக்கிறேன்..உங்கள் எழுத்தில் வாழ்கிறார்கள் ..பல ஆன்மாக்கள் ..தங்களது அம்மா அதில் முதலிடத்தில் ! 21-Nov-2017 6:12 am
இதைப் பதிவிட முக்கிய காரணங்கள் அந்த நல்ல மருத்துவர்/ மருத்துவமனை பற்றி குறிப்பிட வேண்டும் என்றே. மேலும் இது போன்ற சூழலில் பாதிக்கப் படுபவர்களின் திலை! 21-Mar-2015 10:05 am
கருணாநிதி அளித்த படைப்பில் (public) KR Rajendran மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Aug-2016 11:29 am

ஏதோ ..
தப்பு செய்து விட்டது போல்
வேகமாய் நகர்ந்து கொண்டிருந்த
மேகக் கூட்டமொன்றை
பின்தொடர்ந்தேன் ..

திரும்புகையில் ..
அவற்றில் கொஞ்சத்தை
கைது செய்து
கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்
இப்போது ..!

மலையில் ..
மோதிப் பிரிந்து
கலைந்த மேகங்களில் ..

கொஞ்சம்
கலந்தன .. மீண்டும் வானில்

கொஞ்சம்
பரவின .. பச்சை மரங்களில் ..

கொஞ்சம்
படர்ந்தன ..என் மேனியில் !

சில்லென்ற நினைவுகளோடும்
மேகங்களின் மிச்சத்தோடும் ..
மெல்ல கண்களை மூடியபடி
நீண்ட நாட்களுக்குப் பின்
நிம்மதியானதொரு
உறக்கத்திற்கு ஆயத்தமாகிறேன் ..!

மேலும்

நன்றி நண்பரே ! 16-Aug-2016 7:14 pm
நன்றி நண்பரே ! 16-Aug-2016 7:14 pm
நன்றி சார் ! 16-Aug-2016 7:13 pm
கவிதையின் சொற்காட்சியில் கண்ணை மூடினேன். மனதில் இயற்கைக்காட்சிகள் ஒரு அழகிய சலனப்படமாய் கவரி வீசி நிற்கிறது. 10-Aug-2016 10:18 pm
கருணாநிதி - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2016 11:38 am

சகியே..

**

என் முடிவுகளை எல்லாம்

நீதான் ..

தீர்மானிப்பேன் என்கிறாய்

எப்போதுமே ..!

எதிர்மறையாய் பேசுகிறாய் ..

எப்போதுமே..!



**

ஆனால் ..

எப்போதுமே..

என் முடிவுகளை

ஏற்றுக் கொள்கிறாய் ..

தோற்று தோற்று

என்னை வெற்றி காண்கிறாய் !



**

எப்போதுமே..

உனது சொல்லுக்குதான்

நான்..

கட்டுப் பட வேண்டும்

என்றே சொல்கிறாய்



**

எப்போதுமே ..

உனக்கு கட்டுப்படுவதுபோல்

நான் பேசுவதை

தெரிந்தும் கூட

எப்படி ரசிக்கிறாய் ..

..



மாறி மாறி

தோற்பதால் நாம்

இருவரும்

வெற்றியல்லவா

பெறுகிறோம்

எப்போதுமே !

………………………………

மேலும்

நல்ல கருத்து! நன்றி நண்பரே! 16-Aug-2016 7:10 pm
சொல்லாமல் ரசிப்பது சுகமே!ஆனால் சொல்லாமல் விடுவதும் காயமே! இனி என்ன செய்வது 08-Aug-2016 1:46 pm
கருணாநிதி - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2016 11:57 am

தூரத்தில் ..
புலிகளின் உறுமல்கள்
சிங்கங்களின் கர்ஜனைகள்

மேலே.. ..
கழுகுகளின் வட்டமடிப்பு
சுட்டெரிக்கும் வெயில்

சற்று நேரத்திற்கெல்லாம்
நிசப்தம் கூடிய அமைதி
கரு முகில்கள் ..
இளம் தூறலாய் மழை..
குளிர்ந்த காற்று ..

அப்போதும் ..
இப்போதும்..
எப்போதும் ..
கவலையின்றி சிரிக்கும்
மலைச்செடியின் மலர்கள்..
பசுந்தென்றல் வீசும் மரங்கள்..
இன்னிசை ரீங்காரம் எழுப்பியபடி
தேனை சேகரிக்கும் தேனீக்கள் ..
யோகத்தில் ஆழ்ந்ததாய்
பிரமிக்க வைக்கும் மலை ..

இவைகளின் நடுவே ..
பாடம் பயில்பவனாய்
மௌனமாய் ..நானும் !

மேலும்

உண்மைதான் நண்பரே! 16-Aug-2016 7:09 pm
நிலைகள் தன்மையானவை நிலை பெற்று நகரும் வரை 08-Aug-2016 1:45 pm
முரளி அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-Jun-2015 11:29 am

உணவு....!

அந்த அடர்ந்த காட்டின் நதியோரம்..... நதி என்று சொல்வது சரியா என்று தோன்றவில்லை... காட்டாறு என்றே கொள்வோம்... அபரிமிதமாக தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.... கொஞ்சம் மேட்டிலிருந்து இறங்கும் பொழுது மீன்கள் துள்ளிக் குதித்து இறங்கியது.... கொஞ்சம் தூரத்தில் நிலம் சமனடைய நீரோட்டம் சற்று அமைதி அடைந்தது..... துள்ளிய மீன்கள் சுற்றி வலம் வந்து தன் கூட்டத்துடன் சற்று கரையருகே ஆராய்ச்சியில் இருந்தது......

தண்ணீரில் யாரங்கே ஒரு குச்சியை நட்டு வைத்தது...? இந்த நீரோட்டத்திலும் ஆடாது நிற்கும் குச்சி அந்தச் சிறிய மீனுக்கு வியப்பை உண்டாக்க தாய் மீனை அழைத்தது..... தூரத்தில் இருந்து பார்

மேலும்

நன்றி சார்! 09-May-2016 10:26 pm
Philosophical..and has a moral too! 09-May-2016 10:07 pm
மிக்க நன்றி திரு ஜின்னா. 07-Jun-2015 8:42 am
மிக அருமை தோழரே... கதை மாதிரி எனக்கு தோன்ற வில்லை... இது வாழ்கையில் நாம் தெரிந்து கொள்ளும் ஒரு செய்தியாகவே படுகிறது.... செய்தி மட்டுமல்ல அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும் ஒரு விசயமாகவே தெரிகிறது... நல்ல விசயங்களை வெகு அருமையாக புரிய வைத்து விட்டீர்கள்... அந்த கொக்கு மீன் உணவில் ஆரம்பித்து இடையில் விவசாயில் அழுகும் நிலையில் தொடர்ந்து இறுதியில் சூப்பர் மார்கெட் சூபெர்வைசர் வரை உணவின் பல பரிமாணங்களை அழகாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள் தொடருகள்... 07-Jun-2015 12:19 am
கருணாநிதி - முரளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2016 9:31 am

தோழர் K .R . ராஜேந்திரன் அவர்களின் படைப்பு மீண்டும் அமெரிக்க மின் சஞ்சிகை பாலசந்திரிகை -யில்..   வாழ்த்துக்கள் திரு ராஜேந்திரன்...   காண சொடுக்குக..



அன்புடன்

முரளி 


மேலும்

நன்றி அம்மா. இவையெல்லாம் 100% உங்களைப் போன்றோரின் ஆசிகள். இந்த தாயன்பு வார்த்தைகள்தான் எனக்கு மிகப்பெரிய உந்துசக்தி. நீங்கள் சொன்னதுபோல் எதுகை மோனையில் கவனம் செலுத்தி ”குழந்தை வெண்பாக்கள்” சிலவற்றைப் படைக்க எண்ணியுள்ளேன்.அம்மாவின் ஆசிகளில் வெண்பாக்களை நல்ல முறையில் படைக்க முயற்சி செய்வேன். 08-May-2016 10:53 am
மனம் நிறைந்த வாழ்த்துகள் இராஜேந்திரா ! 04-May-2016 12:06 am
நன்றி தோழரே,,,எனக்கு "முயற்சி" என்பதன் பின்புலமாக இருப்பதே நீங்கள்தான். கூடவே நம் தளப்பெரியோர்களின் வழிகாட்டல்கள் உயரம் தொடவைக்கிறது. 03-May-2016 2:26 pm
arumaiyaana pataippu manamaarntha vaalththukkal 02-May-2016 4:22 pm
கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Apr-2016 6:45 pm

எழுத்து - தமிழ் கூற்று எண்ணம் போட்டி முடிவு


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எழுத்து நடத்திய எண்ணம் போட்டியின் வெற்றியாளர்...

ஷ்யாமளா ராஜசேகர்

மற்றும் 
பா கற்குவேல்
 
வாழ்த்துக்கள்

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

மிக்க நன்றி புனிதா ! 28-Apr-2016 10:03 pm
நன்றிப்பா ! 28-Apr-2016 10:03 pm
மிக்க நன்றி ராஜன் சார் ! 28-Apr-2016 10:03 pm
மிக்க நன்றி ! 28-Apr-2016 10:02 pm
கருணாநிதி - இராசேந்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2016 2:36 pm

--என் காலடிப் பாதை--
 

ன்புத் தோழமைகளுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும் என் மரியாதை கலந்த வணக்கங்கள்.

இன்றோடு இந்த தளத்தில் இணைந்து 8 மாதங்கள் முடிந்து இன்று 9 ஆவது மாதத்தில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறது என் பாதை. 

சாதாரணமாக  எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை தமிழ்ப்பற்று இங்கு இழுத்து வர,ஆரம்ப சூழ்நிலையில் அதிகம் படிக்கவில்லையே என தன்னம்பிக்கையின்றி எழுத ஆரம்பித்தபோது அந்த ஆரம்ப காலகட்டத்தில் தயக்கம் இருந்தது. தளத்தோழர்கள் உங்களின் கருத்து ஊக்கம்தான், தயக்கம் போக்கி, இந்த தளத்தில்  தொடர்ந்து என்னை எழுத வைத்து முதல் பாதை அமைத்துத் தந்தது.  நீங்கள்  தந்த கருத்து  உற்சாக பாதையில் கொஞ்சம் கொஞ்சமாய் தாழ்வு மனப்பான்மை மறைந்தே விட்டது. அதற்காக ஒவ்வொருவருக்கும் என் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்த விவசாயம் மற்றும் கிராமியம் கலந்து நான் எழுதும் படைப்புகளுக்கு வாழ்த்து தந்த  உற்சாகத்திலும், பலர் எழுதும் கவிதைகளை வாசித்து வாசித்தும் என்னை நானே மெருகேற்றிக் கொண்டேன்

முதன் முதலாக ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக்கொண்ட  கொண்ட   நம் “எழுத்து” தளம் நடத்திய”மீண்டும் மீண்டும்” எனும் கவிதைப் போட்டியில் தளத் தோழர்களோடும்,  தமிழறிஞர்களோடு நானும் பங்குபெற்றேன். பள்ளிப் படிப்பைக் கூட பாதியிலேயே விட்டு வந்த கிராமியத்தவன் நானும் தமிழறிஞர்களோடு பரிசுக்குரியவனாக தேர்ந்தெடுக்கப் பட்டேன். முதன் முதலில் நான் பெற்ற பரிசும் இதுவே. 

அதன் பின் வந்த ”காட்சிப்பிழைகள்” எனும் கசல் திருவிழாவில் பங்கு பெற்று இந்த தளத்தில் எனது 100 ஆவது கவிதையாக அதை  சனவரி முதல் நாளன்று பதிவு செய்தபோது மகிழ்ச்சியில் மனம் திளைத்தேன். உங்கள் ஒவ்வொருவரின் கருத்திலும் என்னை மேம்படுத்திக் கொண்டேன்.உங்கள் ஒவ்வொருவரின் பாராட்டிலும், கருத்திலும் மகிழ்ந்தேன்.அதில் கருத்திட்ட கவித்தா சபாபதி  அய்யா ”வாழ்நாளில் நான் ரசித்த காதல் கவிதைகளில் உலகளாவிய கவிதை என்றும்,  மிகச்சிறந்த 10 கவிதைகளின் முன்வரிசையில் மீட்டுகிறது”என்றும்,   திரு கருணாநிதி அய்யா "கசல் கவிதை தங்கக் கிரீடமாக தமிழன்னைக்கு சமர்ப்பித்து ..மண் வாசம் வீசும் பசுமையான கவிதை ஒன்றை உலகத் தரத்திற்கு உயர வைத்துள்ளவர்" என்றும், திரு இராஜன் அய்யா "தளத்துக்கு மேலும் ஒரு நல்ல படைப்பாளி கிடைத்திருக்கிறார்." அந்த கசல் தொடருக்கு வித்திட்ட திரு ஜின்னா அவர்களின் உணர்வுப்பூர்வமான கருத்துகள், அதை கசல் மாலையாக்கிய திரு முரளி அய்யா மற்றும் உங்கள் பலரின் ஊக்கத்தில் என்னை நானே இன்னும் உயர்த்திக்கொள்ள முடிவெடுத்தேன். அந்தக் கவிதை கசலின் முழு இலக்கணத்தில் இல்லையென்றாலும் தளத்தில் உள்ள இலக்கணத்தோடு உள்ள கசல் கவிதைகளை பார்த்து முயற்சியும் பயிற்சியும் எடுத்துக்கொண்டு என்னை இன்னும் மெருகேற்றிக் கொண்டேன்.  

அதன் பிறகு மருத்துவர் திரு கன்னியப்பன் அய்யா அவர்களின் பெருமையான  சந்திப்பு.. இந்த சந்திப்புக்கு பிறகுதான் இலக்கணப் பாக்களின் மீது ஈர்ப்பு தோன்றியது. என்னைப்  போன்றோர் கவிதை படைப்புகளை எழுதுவதே கடினம். அதிலும் இலக்கணம் என்றால் சொல்ல வேண்டியதில்லை. இலக்கணப் பாக்களின் அருகில் செல்லக் கூட அருகதை இல்லை என்றிருந்த நான், முயன்று என்னை ஆயத்தப் படுத்தி, இலக்கணப் பாக்களின் பக்கம் திரும்பி எனைப்போன்ற விவசாய மக்களுக்காக எனது அனுபவத்தில் உதித்தவற்றையெல்லாம் எடுத்து உழவனதிகாரம் எனும் குறட்பா அதிகாரத்துக்கு முயன்றேன். அதில் சரிபார்ப்பு முன்னோட்டமாக மூன்று குறட்பாக்கள் எழுதினேன். அதில் சியாமளா அம்மா அவர்களின் வாழ்த்து மற்றும் சிறுபயிற்சி,   நான் எழுதிய இம்மூன்று குறட்பாக்கள் பார்த்து திரு சுசீந்தரன் அய்யாவிடம்  கிடைத்த பாராட்டுகள், எசக்கியேல் அய்யாவிடமிருந்து வந்த கருத்துகள், திரு சங்கரன் அய்யாவிடமிருந்து வந்த கருத்துகள், திரு ஆவுடையப்பன் அய்யா, திரு மு.ரா அய்யா, திரு முரளி அய்யா, திரு இராஜன் அய்யா, திரு பழனிகுமார் அய்யா, திரு ஜின்னா போன்றோரின் கருத்துகள் எல்லாமே ஒவ்வொரு படியாக என்னை உயரத்துக்கு கொண்டு வந்தது. 

இன்று 9 ஆவது மாதம் காலடியெடுத்து வைக்கும் இந்த நாளில் அந்த குறள் வெண்பாக்களோடு மீதமுள்ள 7 குறள்களையும் ஒரு அதிகாரமாகவே ”உழவன் - உழவனதிகாரம்” எனும் தலைப்பில் கவிதைகள் பகுதியில் பதிவிட்டிருக்கிறேன். உழவுப் பரம்பரையில் வந்த விவசாயி என்ற முறையில் இதற்காக பெருமை கொள்கிறேன்.  தளம் நுழைந்த இந்த 8 மாத காலத்திற்குள்  நான் பெற்ற மிகப்பெரிய சொத்துகள் பெரியோர்களின் ஆசி, தோழர்களின் முகம் காணா நட்பு மற்றும் மிகப் பெரிய தன்னம்பிக்கை. கிராமியத்தவன், பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவன் என்ற தாழ்வு மனப்பானமையை தூர விலக்கிய தன்னம்பிக்கைதான் முதல் படியானது. 

அதே போல நான் எதிர்கொண்ட துயர சம்பவம் உதயா எனும் உடன்பிறவா தம்பி உதயகுமாரின் இழப்பு. அவர் கல்லூரியில் படித்தாலும் ”வருங்கால வயல்களின் தளபதி” என்று அன்போடு வாய் நிறைய அழைத்து மகிழ்ந்த அந்த உடன்பிறவா தம்பியின் இழப்பு. என் கிராமிய எழுத்துகளில் அவன் எப்போதும் நிறைந்திருக்கிறான். முகம் காணாவிட்டாலும், பொங்கல் சாரல் கிராமியத்தோடு கலந்த நட்பு என்றும் நிலைத்திருக்கும். 

எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் உதயா உட்பட உங்கள் ஒவ்வொருவரின் கவிதைகளிலிருந்தும், கட்டுரைகளில் இருந்தும் கற்றுக்கொண்டேன். அதற்கு நம் ”எழுத்து” தள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், ”எழுத்து” தள குழுமத்துக்கும் இதன் மூலம் நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

ஒருமுறை மருத்துவர் அய்யா என் படைப்பு ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ததை பார்த்த பின்னர்தான் மொழிபெயர்ப்பு ஆசை வந்தது. அந்த மாதத்திலிருந்தே ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை காரணமாக முடிவு செய்து ஆங்கில மொழிகளில் உள்ளவற்றை உள்வாங்க ஆரம்பித்தேன். காரணம் மேலை நாட்டார்கள் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்று புரிந்து அதைவிட அதிகம் நம் மொழியில் தரவேண்டும் என்பதற்காக இப்போது ஆங்கிலத்தை அயராது முயன்று கற்று வருகிறேன். 

விரைவில் என் படைப்பு ஒன்றை நானே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.. உங்களால் ஓரளவுக்கு தமிழில் தேறிவிட்டேன். வெகுவிரைவில் ஆங்கிலத்துக்கும் உங்கள் ஆதரவு தேவை. நான் எழுதப் போகும் ஆங்கில மொழி பெயர்ப்பு எப்படி இருக்கப் போகிறதென்று தெரியாது. ஒன்றுமட்டும் உண்மை. எழுதப் போகும் எந்தப் படைப்பானாலும் சரி. அதற்குரிய மரியாதை அளித்து உயர்வாகவே முயற்சிப்பேன். 

வாழ்த்துங்கள், உங்கள் வாழ்த்துகளில் வளர்கிறேன்      

மேலும்

தங்களின் வாழ்த்துகளே ஆசிகள். இந்த வாழ்த்தில் முயற்சி உற்சாகம் முன்னின்று நடத்தும். நன்றி அய்யா 27-Apr-2016 8:34 pm
உங்களின் பாதையில் என் பயணங்கள் என்றும் தொடரும். வாழ்த்துக்கு நன்றி அய்யா. 27-Apr-2016 8:29 pm
வாழ்த்துக்கள்! தொடருங்கள்! 26-Apr-2016 4:44 pm
அருகதை என்ற வார்த்தையை தவிர்க்கவும் தம்பி..! இந்த இனிய உலகில் யாரும் யாருக்கும் சளைத்தவர்களில்லை.. நம்மை போன்ற சராசரி படைப்பாளிகளுக்கு நமது மாறாத நட்பொன்றே நல்ல ஆறுதலாக இருக்க முடியும். நாமிருவரும் சந்தித்து உரையாடும் காலம் விரைவில் வரும் தம்பி..! 26-Apr-2016 2:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (105)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
முஹம்மது பர்ஸான்

முஹம்மது பர்ஸான்

சம்மாந்துறை, இலங்கை.
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
user photo

செல்வா

விர்ஜினியா, அமெரிக்கா

இவர் பின்தொடர்பவர்கள் (109)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (111)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
சங்கீதா

சங்கீதா

ஈரோடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே