எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பணம் மதிப்பற்று போகும் நாள்வரட்டும்.. நிலம் பொதுவென்ற சட்டம்...

பணம் மதிப்பற்று
போகும் நாள்வரட்டும்..
நிலம் பொதுவென்ற
சட்டம் உடன்வரட்டும்..
தங்கம் தீங்கென்ற
நிலை தரணிவரட்டும்..
மாளிகையை மண்தின்னும்
பயம் மனதில்வரட்டும்..
மாந்தர்கள் சமமென்ற
எண்ணம் மனதினுள்வரட்டும்..
உழைப்பு உயர்வென்ற
உணர்வு உயிரினுள்வரட்டும்
இவை யாவும் நிராசை
என்பின் உன்னை உறிஞ்சி
பிழைப்பவர்கள் கோடி
சேர்ப்பது தடுக்கமுடியா...
கொள்ளை என்பேன்..!!

..கவிபாரதி..

பதிவு : கவிபாரதி
நாள் : 8-Jul-14, 11:19 am

மேலே