எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்ததில் பிடித்தது அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!! திருமண சந்தையில்...

படித்ததில் பிடித்தது

அடகு வைக்கப்படும் ஆண்கள்...!!!

திருமண சந்தையில்
துண்டு போட்டு பேரம் பேசி,
தங்கத்திற்கும் பணத்திற்கும்
ஒப்பந்த முறையில் சாசனம்
எழுதி,மணமகளை இறக்குமதி செய்கின்றனர்..!!
தானமாக கொடுத்த மாட்டை
பல் பிடித்து பார்த்த காலம்மறைந்து,
தங்கம் சுமந்து வரும்
மாட்டுப்பெண்ணை
பல் பிடித்து பார்க்கும் காலம் இது..!!
தற்புகழ்ச்சி தேட தன்மானம் இழந்து
மகனுக்கு செலவிட்டதை
வட்டி கணக்கு பார்த்து
வரதட்சணையில்
ஈடு செய்கின்றனர்..!!
எச்சில் கையில் காக்கை விரட்ட
மனமில்லாத பெரிய மகான்,
தன் மகனின் சிறப்பு சொல்லி
எடைக்கு எடை தங்கம்
கேட்கிறான்...!!!
சுயமாக வாழ வழி
இல்லாதவனை வரதட்சணை
வாங்கியே வள்ளல் ஆக்க
முனைகின்றனர்,பெற்றெடுத்த
அதிசய பிறவிகள்..!!
மணமகன் வீட்டின் சித்தாந்தம்,
தங்கத்துடன் வந்தால் தாலிக்கயிறு,
தங்கமான பெண் மட்டும்
தனியே வந்தால்
மனம் நோகப் பேசி தருவர்
தூக்கு கயிறு..!!
எண்ணெய் தடவி மண்ணில்
புரண்டு மண் எடுப்பதை போல,
மணமகன் தலையை விற்று
பெண் வீட்டை மண்ணோடு மண்
ஆக்கி மகுடம் சூட பார்க்கின்றனர்..!!
மகனை தங்கத்திற்கு அடகு வைத்து
ஊர் மெச்ச நடந்தேறப் போகும்
இந்த அசிங்க நிகழ்ச்சியின் பெயர்
ஆயிரம் காலத்து பயிர்
என்னும் திருமணமாம்..!!!

நாள் : 19-Aug-14, 1:54 am

மேலே