தமிழ் கவிஞர்கள்
>>
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
>>
வீடு நோக்கி ஓடிவந்த
வீடு நோக்கி ஓடிவந்த
வீடு நோக்கி ஓடிவந்த என்னையே
நாடி நிற்குதே அனேக நன்மையே உண்மையே (வீடு)
இனி -
காடு மேடு சொந்தம்
காணும் யாவும் சொந்தம்
கூடுமில்லை குஞ்சுமில்லை
என்ன ஆனந்தம்!
இரு காலிருந்தும் கையிருந்தும்
பாரிலே
ஒரு வாலுமில்லை தலையுமில்லை
வாழ்விலே; (வீடு)
இனிக் காற்று மழையிலின்பம்
கல்லு முள்ளிலின்பம்
பூட்டுமில்லை கதவுமில்லை
எந்தன் வீட்டுக்கே
நான் எண்ணிஎண்ணி கதறியென்ன
உலகிலே
ஒரு இனிப்புமில்லை கசப்புமில்லை
முடிவிலே! (வீடு)
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)