தமிழ் கவிஞர்கள்
>>
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
>>
ஆனாலும் மக்கள் வயிறு காயுது
ஆனாலும் மக்கள் வயிறு காயுது
உண்மையைச் சொன்னவனை
உலகம் வெறுக்குமடா
உதவி செய்ய நினைத்தால்
உள்ளதையும் பறிக்குமடா
உள்ளத்தைக் கல்லாக்கி
ஊமைபோல் வாழ்ந்துவிட்டால்
நல்லவனென்றுன்னை
நடுவில் வைத்துப் போற்றுமடா
இன்ப உலகில் செல்வம் அதிகம்
இதயந்தான் கொஞ்சம் - அன்பு
இதயந்தான் கொஞ்சம்
இதயமுள்ள மனிதன் கையில்
உதவும் பொருள் பஞ்சம் - இன்று
உதவும் பொருள் பஞ்சம் (இன்ப உலகில்)
இரக்கம் கொண்டவனைச் செல்வம்
எதிரி யென்றே சொல்லுதடா
இல்லையென்றே ஏங்கும் நிலையில்
எட்டியுதைத்தே தள்ளுதடா (இன்ப உலகில்)
தேனாறு பாயுது - வயலில்
செங்கதிரும் சாயுது - ஆனாலும்
மக்கள் வயிறு காயுது - அதிசயந்தான் இது
வகையாக இந்த நாட்டில் என்று
மாற்ற முண்டாகுமோ? - கலைந்த
கூட்டம் ஒன்றாகுமோ? (இன்ப உலகில்)
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)