பொழிகிற பெருமழையில்

பொழிகிற பெருமழையில்
என் உப்புமூட்டை கரைகிறது
சிறிது சிறிதாய்
அமைத்த தடுப்புகளையெல்லாம்
தகர்க்கும் நீர்ப்பெருக்கம்.
கேட்டவர்க்குக் கொடுத்திருக்கலாம்
கடந்த கோடையிலேயே...


கவிஞர் : யூமா. வாசுகி(14-Jun-12, 2:53 pm)
பார்வை : 29


பிரபல கவிஞர்கள்

மேலே