ஆறு துணை

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம் -- பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி -- ஓம்சக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.



கணபதி ராயன் -- அவனிரு
காலைப் பிடித் திடுவோம்
குணமுயர்ந் திடவே -- விடுதலை
கூடி மகிழ்ந் திடவே
(ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 1

சொல்லுக் கடங்காவே -- பராசக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள் -- பராசக்தி
வாழி யென்றே துதிப்போம். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 2

வெற்றி வடிவேலன் -- அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்;
சுற்றிநில் லாதேபோ! -- பகையே!
துள்ளி வருகுதுவேல். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 3

தாமரைப் பூவினிலே -- சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே -- கண்ணிலொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 4

பாம்புத் தலைமேலே -- நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ் வோம்
மாம்பழ வாயினிலே -- குழலிடஞ
வண்மை புகழ்ந்திடுவோம். (ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்) 5

செல்வத் திருமகளைத் -- திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்.
செல்வ மெல்லாந் தருவாள் -- நமதொளி
திக்க னைத்தும் பரவும்.


கவிஞர் : சுப்பிரமணிய பாரதி(18-Oct-12, 3:50 pm)
பார்வை : 0


மேலே