என் சிவனே

இந்நாள் வரைக்கும்
நானமர்ந்தால்
சப்திக்காத நாற்காலி
எழுந்தால் அமர்ந்தால்
ஓசை எழுப்பத்
தொடங்கிற்று

நீரை நோக்கிக் குனிந்தால் என்
பிரதிபலிப்பின் சுமை பொறாமல்
அலைகள் விரையும் மறுகரைக்கு.

ஒரு ஜீவனுக்கும்
என் பொருட்டால்
துன்பமில்லாத
நாள் மறைந்து
ஒவ்வொரடிக்கும்
ஒரு ஜீவன் மிதிபட்டுக்
கூவக் கண்டேன் என் சிவனே


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:33 pm)
பார்வை : 0


மேலே