கண்ணும் கண்ணும்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

காதல் என்று அர்த்தம்

கடலை வானம் கொள்ளையடித்தால்

மேகம் என்று அர்த்தம்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

புதையல் என்று அர்த்தம்

புதையல் என்னை கொள்ளையடித்தால்

மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்



பறவைகள் தோன்றினால்

நதிகள் பக்கம் என்று அர்த்தம்

பாற்கடல் பொங்கினால்

வானில் பௌர்ணமி என்று அர்த்தம்

ஆளில்லாமல் அதிகாலை சிரித்தால்

ம்ம்ம் ம்ம்ம் என்று அர்த்தம்

அழகு பெண்ணின் தாயாரென்றால்

அத்தை என்று அர்த்தம்

தாவிடும் ஓடைகள் நதியின்

தங்கைகள் என்று அர்த்தம்

தூவிடும் தூறல்கள் மழையின்

தோழிகள் என்று அர்த்தம்

இரவின் மீது வெள்ளையடித்தால்

விடியல் என்று அர்த்தம்

எதிரி பேரை சொல்லியடித்தால்

வெற்றி என்றே அர்த்தம் அர்த்தம்


கவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:31 pm)
பார்வை : 0


மேலே