யாரோ ஒருத்தர் தலையிலே

நாங்கள் நாலு பேர் எலிகளைத் தின்றோம்
ஒரு காலத்தில்
நாங்களே எலிகளாய்ப் போகலாமென்று
எலிகளாய்ப் போனபின் நெல்களைத் தின்கிறோம்
ஒரு காலத்தில்
நாங்களே நெல்களாய்ப் போகலாமென்று.
நெல்களாய் நாங்கள் ஆனதன் பின்பு
நாங்கள் நாலுபேர் மண்ணைத் தின்கிறோம்
ஒரு காலத்தில்
நாங்களே மண்ணாய்ப் போகலாமென்று


கவிஞர் : ஞானக்கூத்தன்(9-Sep-14, 3:27 pm)
பார்வை : 0


மேலே