நிர்மலம்
வருகிறான் அவன் யார்?
சவரத் தகடா? புதிய பல்பொடியா?
இன்னதென்று
நினைவில் இல்லை. என்னிடம் விற்க
முயன்று, வாங்கப்
படாமல் திரும்பிப் போகிறான் அவன் யார்?
போகும் திசையில்
நிற்கறான் நடக்கிறான் தயங்கிப் போகிறான்
கண்ணுக்குக்கீழ்
தலைப்பில் குத்திய ஐம்பது காசுப்
பேருந்துச் சீட்டுப் போல
என்னவோ சுருக்கம் பார்வையைக் கவரும்.
இடது கையில் ஏதோ
பெட்டியைச் சுமப்பது போன்ற பாவனை.
நிற்கிறான் நடக்கிறான்
பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்
வேங்கட ரங்கம்
பிள்ளைத் தெருவின்
வால்போல் நீண்ட
சந்து முனையில் நின்று கொண்டு
எவளோ ஒருத்தி
பகிரங்கமாக்கிக் குளிக்கத் தொடங்கினான்.
பனம்பழங்கள் இரண்டு
என்மேல் வீழ
விழித்துக் கொண்டேன் எழுப்பினாற் போல.
விழித்துக் கொண்டு
தெருவைப் பார்த்தேன்
வெறிச் சென்றிருந்தது எங்கும்
இந்தக் கனாக்கள்
தெருவில் எங்கும் காணப்படாமல்.
பிரபல கவிஞர்கள்

தபு ஷங்கர்
Thabu Shankar

ஞானக்கூத்தன்
Gnanakoothan

வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan

கனிமொழி
Kanimozhi
