நம்பிக்கை

தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.


கவிஞர் : சுந்தர ராமசாமி(2-Nov-11, 6:05 pm)
பார்வை : 98


பிரபல கவிஞர்கள்

மேலே