தமிழ் கவிஞர்கள்
>>
பாரதிதாசன்
>>
தும்பியும் மலரும்
தும்பியும் மலரும்
மகரந்தப் பொடியைத் தென்றல் -- வாரிக்கொண் டோடி
அகம்நொந்த தும்பிஎதிர் -- அணியாகச் சிந்தும்!
வகைகண்ட தும்பிதன் -- வயிடூரி யக்கண்
மிகவே களிக்கும் அவள் -- விஷயந் தெரிந்தே!
'பூப்பெய்தி விட்டாள்என் -- பொற்றாம ரைப்பெண்
மாப்பிள்ளை என்னை அங்கு -- வரவேண்டு கின்றாள்
நீர்ப்பொய்கை செல்வேன்' என -- நெஞ்சில் நினைக்கும்:
ஆர்க்கின்ற தீம்பண் ஒன்றை -- அவளுக் கனுப்பும்!
அழகான பொய்கை மணி -- அலைமீது கமலம்
பொழியாத தேனைத் தன் -- புதுநாதன் உண்ண
வழிபார்த்திருந்தாள் உடல் -- மயலாற் சிவந்தாள்!
தழையும் பண்ணொன்று வரத் -- தன்மெய் சிலிர்த்தாள்.
கமழ்தாமரைப் பெண் இதழ்க் -- கலைசோரக் கைகள்
அமையாது தாழ ஆர்! -- ஆ!! என்றிருந்தாள்.
இமைப்போதில் தும்பி காதல் -- இசை பாடி வந்தான்.
கமழ்தாமரைப் பெண் இதழ்க் -- கையால் அணைத்தாள்.
பிரபல கவிஞர்கள்
![Thabu Shankar](https://eluthu.com/poem-small-thumb/131.jpg)
தபு ஷங்கர்
Thabu Shankar
![Gnanakoothan](https://eluthu.com/poem-small-thumb/129.jpg)
ஞானக்கூத்தன்
Gnanakoothan
![V. I. S. Jayapalan](https://eluthu.com/poem-small-thumb/128.jpg)
வ. ஐ. ச. ஜெயபாலன்
V. I. S. Jayapalan
![Kanimozhi](https://eluthu.com/poem-small-thumb/127.jpg)
கனிமொழி
Kanimozhi
![Leena Manimegalai](https://eluthu.com/poem-small-thumb/126.jpg)