உணர்வுகள்

உள்ளத்தில் பிறந்து...
ஊமை நரம்புகளில்...
மறைந்து...
கனவுகளில் கரைந்து...
கண்ணீரில் வெளியேறி...
காவியம் படைக்கின்ற...
கனவுகளே...!!!

ஊமைகளின் பாசைகள்...
கற்றுத்தான்...
வாழ நினைத்தீரோ...
வேதனை தினம் தினம்...
சுமந்து தான்...
கானல் ஆனீரோ...!!!

கண்ட சொற்கள்...
புது வடிவம் பெற்று...
புதிராக தினம் தினம் வந்து...
மறைந்து தான்...
போகின்றதே...
மறந்து போவதால் தானோ...!!!

காலங்கள்...
போதை...
கொண்டுவிட்டதால்...
பாதைகள் கூட...
தடுமாறுகின்றதோ...
உணர்வுகளைத்-
தொலைத்துவிட்டு...
பேதைகளாகவே...!!!

எழுதியவர் : கவிஞர் இராஜேந்திரகுமார் (9-Jan-13, 12:49 am)
சேர்த்தது : rajendrakumar
Tanglish : unarvukal
பார்வை : 133

மேலே