சுனாமி
கடல் தாயே...!
உன்
இடத்தில் கோடி
உயிரினங்கள் இருக்க...
ஏன்
சுனாமியாக வந்து
பிஞ்சு உயிரையும்
கொஞ்சமும் நெஞ்சம் இல்லாமல்
கொண்டு சென்றாய் உன் கோட்டைக்கு...?
ஐம்பூதங்களின் ஒருத்தியே ...!
நீ
மட்டும் வளமோடு
இருக்க உன் தோழியை மட்டும்
ஏன் சுடுகாடு ஆக்கிவிட்டாய் ...?

