என் உயிருக்கு ஒரு விடைகொடு....


*
ஏன் இந்த தலைகுனிவு?
எதற்கு இந்த வெட்கம்?
எப்படி இந்த மவுனச்சிரிப்பு?
உன் மவுன புன்னகையால்
என் மனபூரிப்பை மவுனமாக்கினாய்!
*
உன் சத்தமிலாத,முத்தான
சில்லறை சிரிப்புகளால்
என்னை உன் நினைவில்
கடலில் மிதக்கும் முத்தாக்கினாய்!
*
உன் ஓரப்பார்வையினால்
என் உறவுகளைவிட்டு
ஒதுங்கவைத்து
உன்னை மட்டுமே நினைக்கசெய்தாய்!
*
நிலவினை மேகம் மறைப்பதுபோல்
சுகத்தை சுமைகள் மறைப்பதுபோல்
இரவுகளை இமைகள் மறப்பதுபோல்
இதயத்தை ஏன்?மறைக்கின்றாய்!
*
விண்ணில் ஒரு நிலவினைப்போல்
கண்ணில் ஒரு விழியினைப்போல்
மண்ணில்,பல பெண்ணில்,
என்னில்(என்னுள்)
உனை(உன்னை) நான் கண்டேன்...
*
பெண்ணே!
எனக்கொரு உறவுகொடு........
அல்ல....
என் உயிருக்கு ஒரு விடைகொடு....
*



எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (19-Nov-10, 12:56 pm)
பார்வை : 553

மேலே