மறுபடியும் மலரும்
காதல் என்மீது உள்ளதால்
டேய் என்றாய்-அதில்
பாசம் இருந்தது
கல்யாணம் உனக்கு ஆனபின்
டேய் என்கிறாய் -இங்கு
பகையல்லவா இருக்கிறது
நிஜத்தில் நீ
என்னில் இணைந்திருந்தால்
விஷமல்லவா-என்
உதிரத்தில் கலந்திருக்கும்
காரணம் அறிந்துதானோ
காலம் கல்யாண உறவை
உண்மை காதலில் வைத்து
என்னை காத்தது
உன் பொய்யான உடல்
போன பின்பு
மெய்யான ஜீவன் என்னை சேரும்
மறுஜென்மத்தில் மறுபடியும் மலரும்

