ஏமாற்றம்

ஏமாற்றம் நிரந்தரமாய் குத்தகைக்கு எடுத்துக்கொண்டது என் மனதை..!
காலம் அடித்து பிடுங்கிக்கொண்டது என் கனவை..!
என்னை நானே பாரமாய் உணர்கிறேன்..!
வாழ்க்கை என்னும் மிகப்பெரிய பொய்யில் எனை சிக்க வைத்தது யார் ??
இதுவரை நான் பார்த்திராத கடவுளா ??
இல்லை தினம் ந தரிசிக்கும் பெற்றோரா ??
காலச் சூதாட்டதில் எத்தனை முறை தான் பகடைகாயாய் உருள்வது ??
காலை பிறந்து மாலை மடியும், ஈசலை கண்டு பொறமை கொள்கிறது என் மனம்..!
இதோ என் நண்பன் "தனிமை" என்னை காலனிடம் அழைத்து போவதாய் கூறுகிறான்.!
செல்லலாம் என்றிருக்கிறேன்..!!!
இம்முறை ஏமாறமாட்டேன்..!!!