உன் நினைவு

ஊற்றாக உள்ளே
உன்நினைவு பெருகுது
காற்றாக விரிந்தே
கவிதையாக மலருது

மாற்றம் கேட்டு
மனமும் தவிக்குது
நேற்றும் இன்றும்
நெஞ்சம் துடிக்குது

உரிமை உணர்வோடு
உயிரும் பேசுது
எரியும் நெருப்புக்குள்
எண்ணங்கள் வாழுது

வெற்றியின் வேர்தேடி
வேதனைகள் நீளுதே
பற்றிய கொடிபோல்
பாசமிங்கு படருதே

கம்பனுக்கு மகளாகி
கண்ணுக்குள் தேடியே
நம்பவேண்டுமென்றே
நாளெல்லாம் பாடுகின்றேன்

எழுதியவர் : (26-Apr-13, 12:39 am)
Tanglish : un ninaivu
பார்வை : 67

மேலே