பசி எனும் கொடுமையை கொடுத்தது ஏன் ?
![](https://eluthu.com/images/loading.gif)
தனிமையெனும் வறுமையில்
தள்ளாத வயதின் முதுமையில்
பசியின் வறுமையால்
வறண்டு கிடக்கும் நாவில்
வார்த்தையற்று உறங்கும்
இவளால்
கேட்க முடியுமா
சாப்பாடு இருந்தா கொஞ்ச
தயவு பண்ணி கொடுங்கையா - என்று
இல்லை ....
பார்த்ததும் பதைத்து உணவு
கொடுக்கும் நெஞ்சங்களும் இருக்குமா ...?
பறந்து கிடக்கும் உலகிலே
பார்க்கும் கண்களையும்
பேசும் நாவையும்
கை கால் என்று
அனைத்தையும் கொடுத்த இறைவன்
பசி எனும் கொடுமையை கொடுத்தது ஏன் ?