தனித் தமிழ் தந்தை மறை மலை அடிகள்
மறைமலை அடிகள் பிறந்த நாள்
15-7-1876 15-7-2013
தனித்தமிழ் தந்தை !
நேர்மையிலே வைத்தார் சிந்தை !
இல்லறம் கண்டதிலே வள்ளுவரானர்!
இலக்கியம் வழங்கியதில்இளங்கோ ஆனார்!
காவியம் தந்து கம்பரானார் !
ஒருவருக்கும் அஞ்சாத சிங்கமானார் !!
உண்ணுகின்ற சோற்றுக்குள்ளே உதவாத கல்லைப்போல்
கண் நிகர்த்த செந்தமிழில் கலப்புச் சொல்லை
முன்னர் சிலபேதையர் கலந்து விட்டார் !
அழுக்குமணம் கொண்டசிலர் அருந்தமிழை
அழிப்பதற்கு முற்ப்பட்ட அக்காலம் சினந்தெழுந்து
தீந்தமிழால் தீய்த்து விடப் புறப்பட்டார் நம் அடிகள்
தந்திரத்தைத.தன்னறிவுத்திறத்தாலே வென்றார்!
தனித் தமிழில் எழுதித் தரணியிலே உயர்ந்தார்!
தனித்தமிழ் இயக்கம் கண்டார் !
இனித் தமிழ் வாழ வழி செய்தார் !
கணித்தமிழை அயலவரும் கற்கும் வகையில்
மணித்தமிழைஉயர்த்தியே மாண்புறச் செய்தார் !