பனிப்போர் மன நிலையில் ரஷ்யா உள்ளது - புதின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது - ஒபாமா...! வாலை சுருட்டி மண்டியிடுகிறதா....?

அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏவின் முன்னாள் அதிகாரி எட்வர்ட் ஸ்நோடென் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் இணையதளங்களுக்குள் ஊடுருவி ஏராளமான தகவல்களை அமெரிக்க ராணுவம் திரட்டியுள்ளது என அம்பலப்படுத்தினார்.

இதனால் அவரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இதனையடுத்து மாஸ்கோ விமான நிலையத்தில் ஸ்நோடென் தஞ்சம் அடைந்தார்.

ஸ்நோடென்னுக்கு ஈகுவடார், வெனிசூலா, நிகரகுவா உள்ளிட்ட நாடுகள் அரசியல் தஞ்சம் அளிக்க முன்வந்துள்ளன.

ஸ்நோடென்னின் பாஸ்போர்ட்டை அமெரிக்கா முடக்கியதால் அவர் மாஸ்கோவை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

அமெரிக்க அரசு ஒருவருடைய பாஸ்போர்ட் - ஐ முடக்கினால் அவர்கள் எங்குமே பயணிக்க முடியாது..குறிப்பாக விமானத்தில்....இப்படி ஒரு சட்டம் போட்டிருக்கிறார்கள் என்பதே முக்கால்வாசி அமெரிக்கர்களுக்கு தெரியாது...எனவே தான் சூப்பர் ஸ்டார் ஜூலியன் அசாங்கே பிரிட்டனில் உள்ள ஈக்வெடார் தூதரகத்திலேயே இன்று வரை உள்ளார்...

இந்நிலையில் ஸ்நோடென்னுக்கு விக்கிலீக்ஸ் இணையதள அதிபர் ஜுலியன் அசாஞ்சேவின் குழுவினர் உதவி வருகின்றனர்.

ஸ்நோடென்னுக்கு ரஷ்யாவில் தஞ்சம் அளிக்கக் கூடாது என்று ஒபாமா, புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதனை புடின் மறுத்துவிட்டார்.

இதனால் ரஷ்யாவில் செப்டம்பரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் திட்டத்தை ஒபாமா ரத்து செய்ததாக கூறப்பட்டது.

இந்த சூழலில் ஸ்நோடென்னுக்கு மாஸ்கோவில் தங்க ரஷ்யா அரசு தற்காலிக அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து நேற்று ஒபாமா அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில், ரஷ்யா தொடர்ந்து அமெரிக்காவுடன் பனிப்போர் மனநிலையுடன் செயல்பட்டு வருகிறது. என்எஸ்ஏவின் முன்னாள் ஊழியர் ஸ்நோடென்னுக்கு தற்காலிக தஞ்சம் அளித்த ரஷ்ய அரசின் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

ஸ்நோடென் அமெரிக்காவிற்கு திரும்பி வழக்கை சந்திக்க ரஷ்யா உதவ வேண்டும்.

ஆனால் ரஷ்யா இந்த விவகாரத்தில் சொன்ன வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்று தெரிவித்தார்.

செப்டம்பரில் நடக்கும் ஜி-20 நாடுகளின் மாநாட்டில் ஒபாமா கலந்து கொள்வார். ஆனால் ஸ்நோடென் விவகாரம் காரணமாக புடினை சந்திக்க மாட்டார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்னோடென் அமெரிக்காவிற்கு திரும்பி வழக்கை சந்திக்க உதவ வேண்டுமாம்....இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் நாங்கள் சட்டப்படி நடப்போம் என்று ஏமாற்றுவீர்கள் ஊரையும் உலகத்தையும்...?

பிராட்லி மேன்னன் என்ற என்.எஸ்.ஏ. உளவு அதிகாரிக்கு 136 வருடங்கள் ஆயுள் தண்டனை என்று தீர்ப்பு கூறினார்கள்...பிறகு இல்லை இல்லை..
அவருக்கு 90 வருடங்கள் என்று தீர்ப்பு எழுதி விட்டேன் என்கிறார்கள்....எப்படி இருக்கிறது இவர்களின் தண்டனைகள்...?

அதுபோல ஸ்னோடென் அவர்களும் அமெரிக்காவில் வழக்கை சந்தித்து இதுபோன்று 567 வருட ஆயுள் தண்டனை என்று தீர்ப்புகளை வழங்கவா..?

மேலும் இதுபோன்ற உளவு சார்ந்த விசயங்களை மிக மிக ஊமையாக இருந்து கொண்டு சாதிக்கும் சீன உளவுத் துறை பற்றி எங்கேயும் எதுவும் கசிந்ததே இல்லை...சீன பேரங்கள் முடிவுற்றால்
ஸ்னோடென் - ஐ ரசிய அரசு அமெரிக்காவிடம் ஒப்படைத்து விடும்....ஏனென்றால் அவர்களும் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார்களாம் ....
தற்காலிக விசா வழங்கியதன் மூலம்....

பிறகு G - 20 நாடுகளின் கூட்டம் ரசியாவில் நடைபெறும் பொழுது புறக்கணிப்போம் என்பதெல்லாம் அண்ட ஆகாச புளுகுதான்...அந்த மாநாட்டை நடத்துபவர்களே இந்த அமேரிக்கா தான்...

அங்கே தான் இவர்கள் அனைவரும் தங்கள் நாட்டில் உள்ள மக்களுக்கும் உலக மக்களுக்கும் எதிராக எப்படியெல்லாம் செயல்படலாம் என்று முடிவுகள் எடுப்பதே...என்ற நிலையில் புறக்கணிப்பு என்பதெல்லாம் பேரம் படிவதற்கான கால நேரமும் முடிவும் தான் எனலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (7-Aug-13, 2:21 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 164

சிறந்த கட்டுரைகள்

மேலே