என்னை யார் என்று தெரியுமா ...?

பரீட்சை நடந்துகொண்டிருந்தது. ஒரு மாணவன் பரீட்சை ஹாலுக்கு அரை மணி நேரம் லேட்டாக வந்து சேர்ந்தான்.

"தம்பி நீ ரொம்ப லேட். இன்னும் இரண்டு மணி நேரத்துல எழுதி முடிச்சுடனும்" என்றார் ஆசிரியர். மாணவன் ஒத்துக்கொண்டான்.

ஆசிரியர் சொன்ன நேரம் வந்தது.

ஆனால் அந்த மாணவன் எழுதிக்கொண்டே இருந்தான். "தம்பி டைம் ஆயிடுச்சு. இனிமே நீ பேப்பர் குடுத்தா வாங்க மாட்டேன்" என்றார் ஆசிரியர்.

மாணவன் எரிச்சலாகி பேப்பரைத் தூக்கி வீசி

"போங்கய்யா நீங்களும் உங்க எக்ஸாமும்!" என்று கத்தினான்.

"டேய் நீ ரொம்ப அதிகமாப் பேசறே! ப்ரின்சிபால் கிட்டே கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்" என்றார் ஆசிரியர்.

"நான் யார் தெரியுமா?" என்றான் மாணவன்.

"நீ யாரா இருந்தா எனக்கென்ன?" என்று கடுப்பாக சொன்னார் ஆசிரியர்.

"நான் யார்னு தெரியாது உங்களுக்கு?" என்றான் மாணவன் மீண்டும்.

"தெரியாது!!!" என்று கத்தினார் ஆசிரியர்.

"அப்ப நல்லதாப் போச்சு!" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் மாணவன்.






நன்றி ;தமிழ் களஞ்சியம்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (8-Aug-13, 2:35 pm)
பார்வை : 218

சிறந்த நகைச்சுவைகள்

மேலே