தொகுத்த சிரிப்புகள்
""சின்ன வயசுலயே என் பையன் ரொம்ப ரோஷக்காரனா இருக்கான்.''
""எப்படி?''
""மார்க் குறைவா வாங்கியிருந்தான்னு இனிமே என் முகத்துல முழிக்காதேன்னு திட்டினேன். அதுலேர்ந்து காலையில அவனை எழுப்பினா, "நீ தூரமா போ, நான் எழுந்துக்கிறேன்'னு கறாரா சொல்றானே!''
வி.ரேவதி, தஞ்சாவூர்.
***************************
""நீங்க எழுதுற ஜோக் ஒவ்வொண்ணும் சிந்திக்கிற மாதிரி இருக்கும்.''
""எப்படி?''
""இதுக்கு முன்னாடி இந்த ஜோக்கை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்குன்னு!''
பி.பாலாஜி கணேஷ், 240, வேளாளர் தெரு,
***************************
""எதுக்காக உனக்கு இருநூறு ரூபா கொடுத்தாங்க?''
""நான் பாட்டுப் பாடுனதுக்கு.''
""அப்புறம் எதுக்கு இந்த ஐநூறு ரூபா கொடுத்தாங்க?''
""பாட்டை நிறுத்துனதுக்கு.''
அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
*****************************
""மாத்திரையை எடுத்துக்கிட்டு சுடுகாட்டுப் பக்கம் ஏன்டா போறே?''
""ஆவி பிடிக்கிற மாத்திரைன்னு சொன்னாங்க, அதான்!''
பி.தர்சினி, 76, ஜெ.வி. கீழத் தெரு, குடந்தை-1.
******************************
""தத்ரூபமா படம் வரைஞ்சும் மன்னரு பரிசு தரலையா ஏன்?''
""அதுவா... போர்க் களத்துல இருந்து மன்னர் ஓடற மாதிரியல்ல படம் வரைஞ்சிருந்தேன்.''
ஜி.அப்துல்பாரி, பழனி.

