அம்மாவின் அன்பு முத்தம்

தன் உடல் மூலம் உடல் தந்து, உடலிற்கு உயிர் தந்து,உயிர்க்கு உணர்வுகளும் தந்து, தன் இரத்தத்தை உணவாகவும் தந்து, இவையெல்லாம் போதாதென்று தன் உள்ளத்தையும் தருவாள் தாய் என்ற உறவு !
அவள் பாசம் என்கிற நிலவு !
பூமியிலும் சொர்க்கம் காட்டும் கதவு !
அவள் மனதெல்லாம் பிள்ளைகளின் நினைவு !
பெண் இனத்திற்கு மட்டும் கிட்டும் அற்புத அறிவு !
இறைவன் எல்லா ஜீவனுக்கும் காட்டுகின்ற பரிவு !
அம்மாவின் அன்பு முத்தம் அழகிய பதிவு !
அன்னையின் உருவில் ஆண்டவன் வாழ்கிறான் என்பது தெளிவு !
தாயன்பிற்கு இல்லை ஒரு முடிவு !