என் தசாவதாரம்..!

உன் இதயத்தில் முதலில் அழைத்து சென்றாய் - நண்பன்
உனை கேட்காமல் உள்ளத்தில் ஏற்றி வைத்து - திருடன்
உன் இதழ் திறந்து என்னை நீ சொன்ன வார்த்தை - அழகன்
உன்னருகில் இருக்கும்போது தொடவிடாமல்- நல்லவன்
உனை காண வரவேண்டி என் வீட்டாரிடம் - பொய்யன்
உன் காதில் அலைபேசியில் கொஞ்சும்போது - பாடகன்
உன் பாதை பார்த்து வீசும் பார்வைகளுக்கு - முரடன்
உனை நினைத்து தனிமையில் எழுதுவது - கவிஞன்
உன் நினைவை விரட்ட முயலும்போது -
குடிகாரன்
உனை இழந்த பின் உலகே தெரியவில்லை - குருடன்
என்னால் முடியாத அவதாரம் -
காதலன் ஏன்..?

நாராயணா...நாராயணா..!

எழுதியவர் : குமரி பையன் (23-Aug-13, 2:37 am)
பார்வை : 103

மேலே