கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் -9

தண்ணி அடிச்சிட்டு ECRல தாறுமாறா வண்டி ஒட்டி, தானும் செத்து, ஒழுங்கா போற நாலு பேரையும் சேர்த்து கொல்லுறதுக்கு பேரு, புத்தாண்டு கொண்டாட்டம் ......

இன்னும் ஒரு குரூப் இருக்குது ..மத்த நாள் எல்லாம் பேய்களுக்கு ஒதுக்கப்பட்ட நைட் 12 மணிக்கு, கோயில்ல 4 கிலோமீட்டர் கியூல போயி நிக்க வேண்டியது...அப்புறம் அடுத்த நாள், சளி, காய்ச்சல்ன்னு வீட்ல படுத்து கிடக்குறது ...

இன்னொருத்தன் இருக்கான்...நல்லா தூங்கிட்டு இருக்கும்போது, 12 மணிக்கு போன் போட்டு , ஹேப்பி நியூ இயர் ன்னு கத்துவாணுக ...சில பேரு டென்சன்ல ஹேப்பி பர்த் டே கூட சொல்லி இருக்கான் ....

இன்னும் சில பேரு SMS அனுப்பியே கொல்லுவாங்க.....

நானெல்லாம் வழக்கம் போல 10 மணிக்கு போர்வைய போர்த்திகிட்டு, கவுந்தடிச்சு தூங்குற ஆளு...சோ ..என்னைய மட்டும் விட்ருங்க ...

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 6:25 pm)
பார்வை : 96

சிறந்த நகைச்சுவைகள்

மேலே