மடையன்

ஒரு முட்டாள் பத்து ரூபாய் பணம் கொடுத்து லாட்டரி டிக்கெட் ஒன்று வாங்கினான். ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அவனுக்கு விழுந்தது. ஒரு கோடி ஒரு கோடி என்று எதிர்பார்த்த படி பரிசு வாங்க போனான்.

முப்பது சதவிகிதம் வரி பிடித்துக் கொண்டு எழுபது லட்சம் தருவார்கள். அது தான் சட்டம் என்று சொல்லப்பட்டது. வந்ததே கோபம் மடையனுக்கு.. "நீங்களும் ஆச்சு உங்கள் சட்டமும் ஆச்சு.. யாருக்கு வேண்டும் உங்கள் எழுபது லட்சம்.. யாரை ஏமாற்ற பார்க்கிறீர்கள்.. நீங்களே வைத்து கொள்ளுங்கள் உங்கள் பரிசுத் தொகையை..மரியாதையாக இந்த டிக்கெட்டுக்கு நான் கொடுத்த பத்து ரூபாயைத் திருப்பிக் கொடுங்கள். நான் போய் வேறு மாநில லாட்டரி வாங்கிக் கொள்ளுகிறேன்" என்று கூச்சல் இட்டான்.

எழுதியவர் : முரளிதரன் (29-Jan-14, 1:24 pm)
பார்வை : 154

சிறந்த நகைச்சுவைகள்

மேலே