நாளை உன் புதிய சரித்திரம்

வானத்து மேகங்களே! மழைத்துளி தாருங்களேன்.
தேகங்கள் நனைந்திடவே! சிறு தென்றலும் தாருங்களேன்.
மலர்களின் வாசம்தான்,மனிதனின் சுவாசமே!
காற்றிலே மழைத்துளி ,தென்றலாய் மாறுமே!
சிறு கூட்டினுள் வாழும்,பறவையின் சிறகு,
விரிந்திட மறுப்பதில்லை.
வெகு தூரங்கள் சென்று திரும்பிடும் போதும்,
தூரத்தை அழைப்பதில்லை.
வானமே எல்லையாய் மாறிடும் நண்பனே!
உன்னை மாற்றிடு நண்பனே!
கவிஞனின் இரசனைதான்,பாடலாய் ஒலிக்குது!
வைரனின் வார்த்தைதான், கவிதையாய் பூக்குது!
செடிகளின் வலிமைதான்,வண்ணமாய் மலருது!
வானத்து விண்மீனே!
உன் ஒளியினைத் தருவாயா!
மின்மினியாய் பறக்க,புது சிறகுகளும் தருவாயா!
சாரலாய் வருகிறேன்,தேகங்கள் நனைய வா!
கவிதையாய் வருகிறேன்,பாடலாய் படவா!
கடலின் சீற்றத்தை நினைத்திடும் படகு,
கரையச் சேர்வதில்லை.
நடுக்கடலினில் படகு அசைந்திடும் போதும்,
பயணத்தை முடிப்பதில்லை.
அலையின் மேல் பனித்துளி! பார்ப்பது அதிசயம்!
துளிகளே உன்வசம்!வெற்றியும் நிச்சயம்.
நிலவு உன் கண்களில்,பிறைகளைத் தேடுமே!
பூக்கள் உன் வாசலை,சேர்ந்திட துடிக்குமே!
நீ! கை தட்டும் போதெல்லாம்,பூமழை தூவுமே!
இந்தியன் கண்கள் சிந்திடும்,கண்ணீர்!
மண்ணில் விழலாமா!
கைக்குட்டையாய் உன் விரல் மாறி,
துடைத்திடல் வேண்டாமா!
சிற்ப்பியினுள் விழுந்திடும் மழைத்துளி,முத்தாய்!
மாறுதல் போல்.
உன் கண்களில் வழிந்திடும் கண்ணீர்த் துளிகளும்,
நாளை வைரமாய்! மின்னிடுமே.......
தேய்கின்ற பிறைகளும்,
வளர்ந்திடும் நாள் வரும்.
அதிஷ்டமான நாள் இன்று,"பூஞ்சோலையாய்",
உன் வாசலில்.
இலட்சியம் நிச்சயம்,வெல்வது சத்தியம்.
பயணத்தில் தடைகளும்,வருவது இயல்புதான்.
தடைகளைத் தகர்த்திடு,
துணிவினை உயர்த்திடு,
வாழ்க்கையின் தேடலை,சரித்திரமாய் செதுக்கிடு.
எழுந்து(வீரமாய்) நில் நண்பனே!
துணிந்து செய்,தோழனே!
இன்று உன் துணிவு தான், நாளை உன்"சரித்திரம்".