நான் யார்

அறிவுற்றோர்
கூரறிவு பெறுவர்
அறிவீனத்தை கண்டு
அகன்று
விடுவர்..
ஞானம்
வீதியில் இருந்து
உரத்த குரல்
இடுகிறது கேட்பதற்கு
மனிதர்கள்
இருக்கிறதா
என்று...!
விழி திறந்து
தூங்கும் உள்ளத்திற்கும்
தெளிவு
என்பது எட்டா
கனி தானே..!
ஞானக்
கனி என்னும் அமுதை
பருகிட
ஆசையுடன்
பேராசை
பகல் கனவு
காண்பது
நிழல் அற்ற நிஜத்தை
நம்புவதற்கு
உவப்பாகுமே...!
மூடர்கள்
கையில் சிக்கிடுமா
கயவர்கள்
நெஞ்சில்
வளர்ந்திடுமா
எல்லோருக்கும்
கிடைத்து விட்டால்
வீதியிலே
வந்திடுமே..!!
அவன்
எழுதிய எழுத்து
அவனுக்கே அறியும்
இவன் போட்ட
கணக்கு
நிலையற்றே
முடியும்..
தப்பிக்க
முடிவு செய்யும்
பாவப்பட்ட
வேச தாரிகள்
காலத்திடம் ஒரு நாள்
பதில்
சொல்லியே
ஆகவேண்டும்..
இதை
சிந்தனை செய்திடு
நிலையான
வாழ்கையை
தேடிடு என்
அன்பு மனமே..