சருகின் சங்கீதம்

கண்ணாடி நினைவுகளால்
கருக்கலான
இரவு.
கருவேல முள்பட்டு
கிழிந்து போன
முந்தானையாய் உன்முகம்.
நினைவுக் குடிசையின்
இடைவெளி வழியே
சமாதியான ஒளிக்கீற்று.
சிலநாள் வெளிச்சம்
மழைநாளில் நடுக்கம்.
உதிர்ந்து போன
சருகுகளுக்கிடையே
ஓயாத
உன் காலடிஓசை.
கண்ணாடிக்குடுவைக்குள்
பாதரசமாய்
உருளுகிறது வாழ்க்கை.

எழுதியவர் : கணேஷ் கா (2-Feb-14, 9:46 am)
பார்வை : 63

சிறந்த கவிதைகள்

மேலே