தாரம் இவள் என் ஆதாரம்

-நல்ல மனைவிக்கு சமர்ப்பணம் -

தன் சொந்தங்களைவிட்டு
என் சொந்தமெனவந்தவள்
என்னில் அடைக்கலமாகி
என்னை அடக்கியாள்பவள்
வாழ்க்கை சக்கரத்தின்
அச்சாணியாய் இருப்பவள்,,,,

வாழ்வின் இரண்டாம் பாதி
பதியெந்தன் சதியானால்
வசந்த கால தென்றலும்
புரட்டிப்போடும் புயலும்
அவளே எனக்கு என்றும்
அள்ள குறையா அமுதசுரபி,,,

அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் பிரதிபலிப்பாய்
நேசிக்கும் உற்ற தோழியாய்
படுக்கையில் தாசியாய்
தேவைக்கேற்ப தன்னிலை
மாற்றிக்கொள்பவள்,,,

வாழ்வின் வசந்தமென்று
என் வாசல் வந்தவள்
பூர்த்தி செய்யப்பட்ட
என் விலா எலும்புகள்
என்னை மணம்கொண்டு
என் மனம் கொணர்தவள்,,,,

உனக்காய் என்றும் நான் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன் (22-Feb-14, 3:01 pm)
பார்வை : 2652

மேலே