ஒளிமயமான எதிர்காலம்

வாழ்க்கைச் சூதாட்டத்தில்
வாழ விரும்பும் இளைஞனே...!

ஒன்றை இழந்து பார்..!
மற்றொன்று நிச்சயம் கிட்டும்...

சோம்பலை இழந்து பார்..!
சோர்விலா சக்தி கிடைக்கும்..!

தூக்கத்தை இழந்து பார்..!
துக்கமில்லா வாழ்வு கிடைக்கும்..!

குழப்பங்களை இழந்து பார்..!
குழம்பிய மனதில் தெளிவு பிறக்கும்..!

சோகத்தை இழந்து பார்..!
தேகத்தில் மகிழ்ச்சி பிறக்கும்..!

அச்சத்தை இழந்து பார்..!
ஆகாயம் தொடும் வாய்ப்பு கிட்டும்..

கோபத்தை இழந்து பார்..!
பாபமில்லா வாழ்வு கிடைக்கும்...

அறியாமையை இழந்து பார்..!
அகத்தில் அறிவு பெருகும்..!

பொய்ம்மையை இழந்து பார்..!
மெய்ம்மையான வாழ்வு கிட்டும்...

சிறுமையை இழந்து பார்..!
பெருமைகள் உன்னை அடையும்...

உன்னில் தீயதை இழந்து பார்..!
உன்னுள் நல்லது பிறக்கும்...

இழப்பவற்றை இழந்து,
கிடைப்பவற்றை பயன்படுத்திப் பார்...
ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும்...!!!!


இப்படிக்கு,
இழக்கத் தொடங்கியிருக்கும்
இளைஞன்,
ச.பாலமுரளி..

(பாபம்‍-பாவம்)

எழுதியவர் : ச.பாலமுரளி.. (24-Feb-14, 5:20 pm)
சேர்த்தது : ssbalamurali
பார்வை : 686

மேலே