தொடர முடியா கனவுகள்

மறக்கமுடியா நிகழ்வுகள்
முறிந்துபோன உறவுகள்
விடிய இயலா இரவுகள்
இவை தொடர முடியா கனவுகள்

மன்னிப்பது மனித இனம்
மறப்பது தெய்வ குணம்
மறக்க நான் கடவுளுமில்லை
மன்னிக்க இங்கு மனிதருமில்லை

மனிதம் மாண்டு ஆகிவிட்டது நூற்றாண்டு
சிறையில் கிடக்குது மனிதா உன் அன்பின்று
கண்களின் இமையாக மாறிவிட்ட பணம்
பணம் செதுக்கும் கற்சிலையாக இன்று உன் மனம்

மண் விழுந்த சிசுவிற்க்கும் பகைமை பார்க்கும் சொந்தம்
இதுதானா என் உயிராக நான் நினைத்த பந்தம்
கடல் தாண்டி வந்தேனே என் குலம் கூடி வாழ
நின்றேனே தனி மரமாய் இனி எந்த நாட்டை ஆள

எழுதியவர் : Anonymous (5-Dec-09, 12:51 pm)
சேர்த்தது : savitha
பார்வை : 1125

மேலே