பிரிவு

உன் திருமுகத்தை ஒரு முகமாக்கி
என் அகக்கண்ணில் சிறை வைத்துள்ளேன்...!
உன் நினைவுகளை பசுமையாக்கி
என் இதயத்தில் பதியமிட்டிருக்கிறேன்...!
உன் நேசத்தை சுவாசமாக்கி
என் உயிர்க்கூட்டில் கட்டியிருக்கிறேன்...!
விழத்துடித்த கண்ணீரை
என் விழிகளுக்குள் பூட்டி வைத்திருக்கிறேன்..!
எத்தனையோ தயார் செய்தேன்
என்னை நானே...
அத்தனையும் மறந்து போய்...!
கலங்குகிறது கண்ணும் மனசும்...
பொருள் தேடி தூர தேசம் செல்லும் நீ...
கையசைத்து கடந்து சென்ற பின்...!

எழுதியவர் : ச. ஜெயக்குமாரி (3-Mar-14, 3:01 pm)
சேர்த்தது : jayakumari
Tanglish : pirivu
பார்வை : 114

மேலே