ஓர் எழுத்தாளனின் கதை-11

கல்லூரி பூங்காவில்,

தினகரன் மிகுந்த ஆக்ரோஷத்துடன் கவிதை மடமடவென எழுதினான். மூளையில் சிந்திக்கும் வார்த்தைகள் உடனடியாக தாளில் பதிவாகின.

சற்று நேரத்திற்கு பிறகு...!

தினகரன் கவிதை எழுத
எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த காவியா , தினகரன் எழுதுவதை கவனித்துக்கொண்டிருந்தாள் என்பதை விட அவனையே , அவனின் அழகை ரசித்துக்கொண்டிருந்தாள் அவனின் மேல் இருக்கும் ஈர்ப்பால்.. தன் பெண்மையின் உணர்வால் இவளின் மூளைக்குள்ளும் ஓர் இராசாயன மாற்றம் ஏற்பட்டது.

தினகரன் எழுதுவது ஓர் ஆக்ரோஷ கவிதை. காவியாவின் மனதில் எழுதப்படுகிறது காதல் கவிதை. இது இரு வேறுப்பட்ட நிகழ்வுகள் முத்தமிடும் நேரம்.
எப்படி, எந்த நேரத்தில் இவளுக்கு அவன் மீதான காதல் உண்டானது என்பது காவியாவிற்கே புரியவில்லை. இந்த உலகில் உண்மையாய் காதலிக்கும் அனைத்து பெண்களுக்கும் இப்படித்தான் புரியாமல் இருப்பார்கள், இருந்திருப்பார்கள்.

”தினா...! கவிதை இதுவரை எப்படி எழுதியிருக்க. உனக்கு திருப்தியா இருக்கா? “ காவியா
“ ஏன் உனக்கு திருப்தியா இருக்க வேண்டாமா? கொஞ்சம் வெயிட் பண்ணு. இன்னும் கொஞ்சம் எழுதணும்.”
“ டேய்,, கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸ் பண்ணிக்கோ...! அப்புறம் எழுதலாம் “
“ இல்ல விட்டா அப்புறம் இதே ஸ்பீடு, இதே திங்கிங் மாறி போயிடும்.. ஈழத்து பிரச்சினை பற்றி இரண்டு வரி எழுதணும். அதைதான் நான் ஆக்ரோஷமா எழுதணும் காவி.” என்றவனின் அருகில் காவியா நெருங்கி வந்து அமர்ந்து அவனின் தோள் மீது கைப்போட்டு ஓர் இனம்புரியா பாசத்துடன் அவன் எழுதும் தாளை பார்க்கிறாள். இதை கவனித்த தினகரன்

“ ஹே என்ன இது ?இப்படி பார்க்கிற..! புதுசா தோள் மேல கையப்போடுற,, . என் மேல தீடீர்ன்னு பாசமா? “

“ம்ம் பாசம்தான்..பாசத்துக்கு இன்னொரு பேரு என்ன தினா? “

”காவி......! கவிதை எழுதிட்டு இருக்கிறேன். இப்போ இந்த கேள்வி தேவையா? டிஸ்டர்ப் பண்ணாதேன்னு சொன்னா நீ என்னை மெண்டலி ஸ்டராங்கா இல்லன்னு பெரிய லெட்சர் எடுப்ப.. ம்ம்ம் . காவி ப்ளீம்மா நீ கையை எடு.. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு”

“ ஆமா நான் அப்படித்தான் பேசுவேன். அப்படித்தான் கையை போடுவேன். ஏன் இப்படி உன் கன்னத்துல முத்தம் கூட கொடுப்பேன்” என்றவள் தினகரனின் கன்னத்தில் தன் முதல் காதல் உணர்வை பதித்தாள். இதை சற்றும் எதிர்பாராத தினகரன் மிரண்டுதான் போனான். பின்பு காவியாவின் கண்களை பார்த்தான், காவியாவின் கண்ணில் புது வசீகரம் ஒன்று தினகரனுக்கு தென்பட்டது. மெலிதாக அவள் சிரிக்க, மெல்லமாக தினகரனின் மூளைக்குள் காதல் ஏறியது .
இதுனால் தினகரனுக்கு இனம்புரியா விதத்தில் அதீத சந்தோஷம் ஏற்பட்டது.

பொதுவாகவே இந்த உலகில் காதலர்களுக்கு காதல் உறுதியாகும் தருணத்தில் ..

இந்த உயிர்
இன்றியமையாதது
என்று அப்போதுதான் புலப்படும்
இந்த ஜென்மத்தின்
பயன்கள் உணர்ந்து
அகராதியில் புது அர்த்தப்படும்.

கவிப்பேராசுவின்
”காதலித்துப்பார்” கவிதை
கடவுள் வாழ்த்தாகும்.
எழுதுகோலில்
”ஹார்மோன்” மைகள்
புகுந்து புதுக்கவிதையாகும்.

**அதீத சந்தோஷத்திலும் தினகரனின் மூளை பாதிப்படைந்து அவனின் உயிருக்கு ஆபத்தாக அமையலாம்*** இது தினகரனுக்கு மருத்துவர் கொடுத்து மருத்து அறிக்கை.

ஓருதலையாக காதலித்த காவியாவே தானாக முன்வந்து அவனை காதலிப்பதாக உணர்த்திய முத்த நிமிடங்கள் தினகரனின் இரத்தம், நாடி, நரம்பு, தசை,சதை, புத்தி என எல்லாவற்றிலும் புது மின்னல் உணர்ச்சிகள் ஏறி மூளையில் தமிழகத்தில் காணாமல் போன மொத்த மின்சார சக்தியும் ஏறியது போன்ற உணர்வு அவனுக்கு உண்டாக்கியது. இந்த நேரத்தில் அவன் எப்படி மூளையை கட்டுப்படுத்த போகிறான். காவியா தேவையில்லாமல் அவனை தூண்டிவிட்டு அவனுக்கு மற்றொரு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி விட்டாளோ?

காவியா செய்தது மிகவும் புத்தசாலித்தனமான செயல்தான் என்பதை தினகரனே உணர்த்தினான்.

“ காவி...! என்னமோ தெரியலே நீ கிஸ் கொடுத்த உடனே என் மனசுல ஒரு பெக்கியூலர் ஃபீல் ஆச்சு. சம்திங் ஏதோ தெரியல... இந்த ஃபீலிங் என்னை கட்டுப்படுத்திக்க முடியாது. ஆனாலும் நீ கிஸ் கொடுத்த முன்னாடி செகண்ட் நான் எப்படி ஆக்ரோஷமா இருந்தேனோ.. அப்படியே இருக்கணும். ப்ளீஸ் நீ இந்த இடத்தை விட்டு போ..!
நாளைக்கு மீட் பண்ணலாம். எனக்கு ஹார்ட் பக் பக் பக்க்னு என்னமோ செய்யுது காவி...” என்று தினகரன் சொன்ன பிறகுதான் காவியா தன் தவறை உணர்ந்தாள் . அவன் இருக்கிற நிலைமையில தேவையில்லாத உணர்ச்சியை, தேவையில்லாம தூண்டி விட்டனே என்று பயப்பட ஆரம்பித்தாள்.

“ தினா... லூசு நான் ஜஸ்ட் சும்மாதான் கிஸ் பண்ணினேன். சின்ன குழந்தைக்கு கொடுப்பாங்ளே.. அப்படி.. என் மனசுல வேற ஒண்ணும் இல்லடா.. உன் மனசை குழப்பிக்காதே..! ப்ளீஸ் டைம் ஆச்சு.. கவிதை எழுது.. ! நான் ஒரு கிறுக்கி உன் மூட் மாத்தி விட்டேன். “ என்று உளறிய காவியாவின் பேச்சை கேட்ட தினகரன்...

“ காவி.. ஐ ம் ஆல்சோ சைக்காலஜி ஸ்டூடண்ட்.. ! சரி விடு..! பொய் பேசாதே...”
“ டேய் ச்சீ.. அதெல்லாம் இல்ல , நான் சும்மாதான் கிஸ் பண்ணினேன் . ஏன் ஒரு பொண்ணு ஒரு பையனுக்கு கிஸ் கொடுத்தா அது தப்பா நினைக்கிற. ஃப்ரெண்ட்ஷிப்பா இருந்தாலும் அன்பு இருந்தா முத்தம் கொடுக்கலாம் “ என்று புரட்சிகரமாக புதுசாக உளறினாள்.

“ ஓகே லீவ் ட் காவி..! ஐ ம் ஓகே.. சரி கொஞ்சம் வெயிட் பண்ணு..! கவிதை எழுதி முடிச்சிடுறேன். “ தினகரன் முழுவதுமாய் பக்குவமடைந்து தன் நோயை தானே குணப்படுத்த முயற்சிக்க ஆரம்பித்தான்.

ஒரு போராட்டத்திற்கான கவிதையை எழுதும்போது ஆக்ரோஷமான சிந்தனைக்கு இடையில் காதல் பூத்த புதிய உற்சாக உணர்வோடு தினகரனின் எழுத்து புதிய உச்சத்தையும் புதிய எழுச்சியையும் பெற்றது. பரிப்பூரண திருப்தியுடன் கவிதை எழுதிவிட்டு காவியாவிடம் காட்டினான்.

“ காவி..! இந்தா இப்போ படிச்சு பாரு.....! “

வாங்கி படித்தாள், ஆச்சரியத்திலும் , தினகரனின் எழுத்தின் புதிய பரிணாமத்தையும் கண்டு அவள் கயல் கண்கள் அகலமாக விரிந்தன.
“ தினா................... உன் கையை கொடு.....”
கைக்குலுக்குவாள் என்று எதார்த்தமாக தன் கையை கொடுத்தான் தினகரன்.

ஆனால் காவியா தினகரனின் கையை தன் மார்போடு அணைத்து கட்டிக்கொண்டாள்.

“ தினா.......! நீ கவிஞன் டா... ஜான்சே இல்ல...” என்று மீண்டும் அவனின் கைகளை இறுக மார்போடு கட்டிக்கொண்டாள்.

பனிக்கட்டி உலக்கை
பஞ்சுபொதியில் மோதி
மோக தீ
ஏற்றிக்கொண்டதோ...?!!

தினா ஏதோ புதுமையாக உணர்தவனாய் .. “ காவி.. கையை விடு. எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. விடுடா காவி.....”

“ என்ன மாதிரி இருந்தா என்னடா.. இது என் ரசனையின் உணர்ச்சி....”

“ காவி... இப்போ நாம் இருப்பது காலேஜ் கேம்பஸ்... புரிஞ்சுக்கோ...! “ என்ற சொன்ன போதுதான் காவியா தன் இயல்புநிலைக்கு திரும்பி.. தீடிரென தினகரனின் கையை உதறிவிட்டாள்.

தினகரன் - காவியா என்ற சிநேகத பறவைகள் இப்போது காதல் பறவையாக உருமாறிவிட்டனர்.

-------------------------------------------------------------------------

மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துன்புறுத்துப்படுவதையும் இதில் மத்திய அரசின் அலட்சிய போக்கினையும் கண்டித்தும் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர் அமைப்பினர் நடத்தும் போராட்ட நாள் வந்தது.

இந்த போராட்டத்தில் தினகரன் - காவியா படிக்கும் கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர். போராட்டத்தின் இறுதியில் தினகரனின் கவிதையை காவியா வாசிக்க போகிறாள்.
-------------------------------------------------------------------------
கவிதையின் உட்கருத்து “ தனி தமிழ்நாடு “ கோரிக்கை உள்ளடக்கியது என்பதால் ” இந்திய இறையாண்மை சட்டம் எனும் இரும்புகரம் மாணவ அமைப்பினரை என்ன செய்யும் ? தினகரன் - காவியா சந்திக்கும் உச்சக்கட்ட பிரச்சினையால் தினகரனின் எழுத்து பயணம் என்னவாகும் ?

-(தொடரும்)

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (20-Mar-14, 8:28 pm)
பார்வை : 227

மேலே