மீண்டும் நான்

பிறந்தஉடன் தூக்கம் தொலைத்தேன் ,
தவழ்ந்தவுடன் ஓய்வை மறந்தேன் ,
உணவுடன் அன்னை சொன்ன கதையில்
அறிவை இழந்தேன்,
பள்ளியில் மடமை இழந்தேன் ,
போட்டியில் இலக்கை இழந்தேன் ,
வாழ்க்கையில் கனவை மறந்தேன் ,
வாலிபத்தில் காதலில் விழுந்தேன் ,
இன்று அவள் பாதசுவடுக்கு பின்னால்
-மீண்டும் நான்
(இழந்தவை அனைத்தும் மீண்டும் பெற )

எழுதியவர் : (13-May-14, 12:06 pm)
சேர்த்தது : annaithasan
பார்வை : 90

மேலே